மாவட்டச் செய்திகள்

தமிழ் கலாச்சாரத்தின் மரபை மதிக்காமல்
கடமைக்கு அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறாரா தேனி மாவட்ட ஆட்சியர் !

தமிழ் கலாச்சாரத்தின் மரபை மதிக்காமல்
கடமைக்கு அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் தேனி மாவட்ட ஆட்சியர்!

தேனி மாவட்ட அமர்வு நீதிபதி அறிவொளி அவர்கள் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.

தேனி மாவட்ட ஆட்சியர் தலைமையில்  தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முன்னிலையில் தேனி மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள
போக்சோ வழக்குகளுக்கான சிறப்பு மாவட்ட நீதிமன்றத்தினை மாவட்ட அமர்வு நீதிபதி அறிவொளி அவர்கள் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.
அப்போது மாவட்ட அமர்வு நீதிபதி தவிர மற்றவர்கள் அனைவரும் காலில் அணிந்துள்ள சூ மற்றும் செருப்புகளை காலையிலிருந்து கழற்றாமல் கலந்து கொண்டது வேதனை அளிக்கிறது.
நிகழ்ச்சி தொடங்குவதற்கு குத்துவிளக்கு ஏற்றும் போது காலணிகளை கழட்டி நிற்க வேண்டும் என்ற தமிழ் கலாச்சாரத்தின் மரபுகளை மறந்து  தலைமை தாங்குகிறேன் என்ற பெயரில் அரசு கட்டிடங்களை திறந்து வைக்கும் நிகழ்ச்சியில் கடமைக்கு வந்து செல்வது போல தேனி மாவட்ட ஆட்சியரின் செயல்பாடுகள் இருப்பதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்

Related Articles

One Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button