மதநல்லிணக்க இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சரை ஐ.பெரியசாமி!

திண்டுக்கல் கிழக்கு மாவட்டம் சார்பாக மதநல்லிணக்க இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி திண்டுக்கல் நாயுடு மஹாலில் நடைபெற்றது.

இந்நிக்ச்சியில் திமுக கழக துணை பொதுச் செயலாளரான ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி அவர்கள் மற்றும் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் பழனி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் IP செந்தில்குமார் MABL MLA அவர்கள் பங்கேற்றார்கள்.

இந்நிகழ்வில் நாட்டமை காஜா மொய்தீன் அவர்கள், வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் காந்திராஜன், GTN கலைக் கல்லூரி தாளாளர் திரு. ரத்தினம் அவர்கள், மாநகராட்சி வணக்கத்துக்குரிய மேயர் திருமதி.இளமதி, மாநகர செயளாலர் திரு.ராஜப்பா, வர்த்தக சங்க நிர்வாகிகள், மாநில, மாவட்ட, மாநகர, ஒன்றிய, பேரூர் பகுதி வார்டு கழக நிர்வாகிகள், மக்கள் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
நோன்பு திறக்கும் மத நல்லிணக்க நிகழ்ச்சி விழாவை மாணவர்கள் துணைச் செயலாளர் 18 ஆவது வார்டு மாநகர கவுன்சிலர் முகமது சித்தீக் அவர்கள் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார் .
திண்டுக்கல் மாவட்ட தலைவர் உழைக்கும் பத்திரிக்கையாளர் சங்கம் சார்பாக
ஏ எம் முபாரக் அலி தி.மு.கழக முன்னாள் ஒன்றிய பிரதிநிதி ஏ எம் முபாரக் அலி அவர்கள்
நிகழ்ச்சிக்கு வந்த அனைவருக்கும் நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டார்.