மத்திய கூட்டுறவு வங்கிகளில் நகை கடன் தள்ளுபடி செய்ய 3000 ரூபாய் லஞ்சமா !?
லஞ்ச ஊழல் முறைகேட்டில் ஈடுபடுபவர்கள் மீது கூட்டுறவு வங்கி பதிவாளர் நடவடிக்கை எடுப்பாரா!?
மத்திய கூட்டுறவு வங்கிகளில் நகை கடன் தள்ளுபடி செய்ய 3000 ரூபாய் லஞ்சமா !?
லஞ்ச ஊழல் முறைகேட்டில் கொடி கட்டிப் பறக்கும்
மத்திய கூட்டுறவு வங்கி நிர்வாகம்! கூட்டுறவு வங்கி பதிவாளர் நடவடிக்கை எடுப்பாரா!?
கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலின் போது திமுக கட்சித் தலைவர் ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரத்தின் போது தாங்கள் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால் பொதுமக்கள் மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் வேளாண் கூட்டுறவு வங்கிகளில் பெற்றிருக்கும் நகைக்கடன் மற்றும் சுய உதவிக் குழுக்கள் பெற்றிருக்கும் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என தற்போது உள்ள முதல்வர் ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதி அளித்து இருந்தது . அதே போல் திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது ஸ்டாலின் அவர்கள் முதல்வராக பதவி ஏற்றவுடன் அவர்கள் தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதியின் அடிப்படையில் நகை கடன் பயிர் கடன் மற்றும் சுய உதவி குழுக்கள் பெற்ற கடன் உதவிகளை ரத்து செய்து அரசாணை பிறப்பிக்கப்பட்டது.
கூட்டுறவு நிறுவனங்களில் மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு கடன் வழங்கப்பட்டு, 2021, மார்ச், 31 வரை நிலுவையில் இருந்த கடனில் அசல் தொகை ரூ.2,459.57 கோடி, வட்டி ரூ.215.07 கோடி சேர்த்து, ரூ.2,674.64 தமிழக அரசு தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.இதில், 2022 நிதியாண்டு, 600 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு, தமிழக அரசு கணக்கில் இருந்து தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கி கணக்கிற்கு வரவு வைக்கப்பட்டுள்ளது….
இத்தொகை, மத்திய கூட்டுறவு வங்கிகள், நகர கூட்டுறவு வங்கிகள், நகர கூட்டுறவு கடன் சங்கங்கள், பல்நோக்கு கூட்டுறவு சங்கங்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு பகிர்ந்தளிக்க வேண்டும்.
மகளிர் சுய உதவிக்குழு கடன் தள்ளுபடி பயனாளிகளின் இறுதி பட்டியலை, கூட்டுறவு தணிக்கைத் துறையினரின் ஆய்வுக்கு பின்னரே, தள்ளுபடி சான்றிதழ் வழங்க அரசு உத்தரவிட்டிருந்தது .உண்மையாகவே மகளிர் குழுக்கள் செயல்படுகிறதா என ஆய்வுக்கு உட்படுத்தப்படும்.
தணிக்கைத்துறை ஆய்வுக்குபின், தள்ளுபடி செய்யப்படும். இந்நிதியாண்டுக்கு, 600 கோடி ரூபாய் விடுவிக்கப்பட்டது.
முதல்வர் ஆணைப்படி, அரசு நிபந்தனைகளுக்கு உட்பட்டு 5758 பயனாளிகளுக்கு ரூ.29.09 கோடி அளவிற்கு நகைக் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
அறிவித்தபடி 293 சுய உதவிக் குழுக்களுக்கு விரைவில் ரூ.7.11 கோடி கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று 2022 அக்டோபர் அமைச்சர் இ.பெரியசாமி தெரிவித்தார்.
நகை கடன் பயிர் கடன் மற்றும் சுய உதவி குழுக்கள் பெற்ற கடன் உதவிகளை ரத்து செய்து அரசாணை பிறப்பிக்கப்பட்டது.
அரசின் இந்த உத்தரவின் அடிப்படையில்
மதுரை மாவட்டம் பாண்டியராஜபுரம் மத்திய கூட்டுறவு வங்கியில் அந்தப் பகுதி மக்கள் வாங்கி இருந்த நகை கடன்கள் வங்கி நிர்வாகத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது .
ஆனால் நகைக்கடன் வாங்கிய மகளிர் சுய உதவி குழுவில் உள்ள அனைவருக்கும் தள்ளுபடி செய்யாமல் அதில் முறைகேடு நடந்திருப்பதாக மகளிர் சுய உதவிக் குழுவில் இருக்கும் பெண் குற்றச்சாட்டை வைத்துள்ளார்.
வாடிப்பட்டி அருகே சாணாம்பட்டி பகுதியை சேர்ந்த அங்கம்மாள் என்பவர் மகளிர் சுய உதவி குழுவில் உள்ளார் இவர் பாண்டிய ராஜபுரம் மத்திய கூட்டுறவு வங்கியில் வங்கியில் இரண்டரை பவுன் நகை வைத்து கடன் பெற்று இருக்கிறார். மேலும் சுய உதவி குழுவில் இணைந்து அதிலும் கடன் பெற்று இருக்கிறார். அரசு தள்ளுபடி அறிவித்ததும் அங்கம்மாள் வங்கி நிர்வாகத்தை அணுகி அவர் பெற்றிருந்த சுய உதவி குழு மூலம் கிடைத்த கடனை தள்ளுபடி செய்ய கேட்டிருக்கிறார்.
அதற்கு வங்கி நிர்வாகம் உங்களது நகை கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது எனவே சுய உதவி குழு மூலம் பெற்ற கடனை முறையாக செலுத்தும் படி அறிவுறுத்தியுள்ளனர் .
ஆனால் அவருக்கு எந்த கடனும் தள்ளுபடி செய்யப்படவில்லை .
மீண்டும் அவர் வங்கியை அணியை விசாரித்த போது நாங்கள் தலைமை வங்கிக்கு அனுப்பி வைத்த தள்ளுபடி செய்தவர்களின் பட்டியலில் உங்கள் பெயரை இணைத்து அனுப்பினோம் .
ஆனால் அரசிடம் இருந்து வந்த தள்ளுபடிக்கான பட்டியலில் உங்கள் பெயர் இல்லை எனவே நீங்கள் பணத்தைக் கட்டி உங்கள் நகையை திருப்புங்கள் அல்லது அதற்கான வட்டியை கட்டி மறு அடமான வைத்துக் கொள்ளவும் என்றும் சுய உதவி குழு மூலம் பெற்ற கடனை விரைவாக பணம் செலுத்தி கணக்கில் முடியுங்கள் என வங்கி நிர்வாகம் தெரிவித்தது.
வங்கி நிர்வாகம் கூறியபடி அந்தப் பெண் நகைக்கு வட்டியை கட்டி மறு அடமானம் வைத்திருக்கிறார்
சுய உதவி குழு மூலம் பெற்ற கடனை தள்ளுபடி செய்யாமல் கடனை கட்டி கணக்கை முடிக்க வங்கி நிர்வாகம் அவரை தொடர்ந்து வற்புறுத்தி வருகிறது.
பொதுவாகவே சுய உதவிக் குழுவில் உள்ள அனைத்து பெண்களும் வங்கி கடன் பெறுவது வழக்கம் அந்த அடிப்படையில் இந்தப் பெண் இணைந்திருந்த சுய உதவி குழுவில் 12 பெண்கள் உறுப்பினர்கள் இதில் பத்து பெண்களின் கடன் தள்ளுபடி செய்து ரத்து செய்யப்பட்டுள்ளன .
ஆனால் இவரது கடன் மட்டும் ரத்து செய்யப்படவில்லை இந்தக் குழுவில் ஒரு அரசு ஊழியர் இருந்ததால் அவரது வங்கி கடனும் தள்ளுபடி செய்யப்படவில்லை.
அரசாணை வரப் பெற்றவுடன் வங்கியில் பணியாற்றும் ஒரு பணியாளர் தள்ளுபடிக்கு தகுதியானவர்களை வங்கிக்கு அழைத்து அவர்களிடம் கையூட்டு பெற்றதாதாக குற்றச்சாட்டை வித்துள்ளார். பாதிக்கப்பட்டு இருக்கும் மகளிர் சுய உதவி குழுவில் இருக்கும் அங்கம்மாளிடம் 3000 ரூபாய் கேட்டதாகவும் தன்னிடம் தற்போது பணம் இல்லை தள்ளுபடி செய்யுங்கள் பிறகு தருகிறேன் என்று கூறியிருக்கிறார் .
பணம் கொடுத்தால் மட்டுமே தள்ளுபடி செய்யப்படும் என வங்கி பணியாளர் கண்டிப்பாக கூறி விட்டதாக சொன்ன குற்றச் சாட்டு உண்மையா என அப்பகுதியில்
விசாரித்த பொழுது பரவலாக தள்ளுபடி பெற்ற அனைவருமே அவர்கள் பெற்ற தள்ளுபடி கடனுக்குரிய தொகைக்கு ஏற்ப கையூட்டு பணம் கொடுத்ததாக தகவல் தெரிவித்தனர்.
உதாரணமாக அந்தப் பகுதியைச் சேர்ந்த பத்திரிக்கை துறையில் பணியாற்றும் ஒருவரின் தந்தை இந்த வங்கியில் நகை கடன் பெற்று இருக்கிறார் அவரிடம் அந்த நகை கடனை தள்ளுபடி செய்ய 2000 ரூபாய் கையூட்டு கேட்டுள்ளார் அந்த வங்கி பணியாளர் அவரும் பத்திரிக்கை துறையில் பணியாற்றும் தனது மகனிடம் இதைச் சொல்லியே 2000 ரூபாய் வாங்கி அந்த வங்கி பணியாளரும் கொடுத்து தள்ளுபடி பெற்றிருக்கிறார்.
அரசு ஏழை எளிய மக்களின் மீது கருணை கொண்டு அவர்கள் பெற்ற கடன்களை ரத்து செய்ய முன் வந்தாலும் அதை சாதகமாக்கி கொண்டு சிலர் பணம் பார்த்து உள்ளனர் .
இதுபோன்ற ஏழை எளிய மக்களுக்கு அரசு கொடுக்கும் சலுகை கூட விலை பேசி விற்கும் இவர்கள் மீது நேர்மையான அதிகாரியை கொண்டு விசாரணை செய்து
தவறு செய்திருக்கும் பட்சத்தில் அவர்கள் மீதும் அதற்கு துணை போன வங்கி பணியாளர்கள் மீதும் அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் .
மேலும் கையூட்டு கொடுக்காததால் பாதிக்கப்பட்டு கடந்த ஒன்றரை ஆண்டுகளாக அலைக்கழிக்கப்படும் அங்கம்மாள் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கை எடுக்க வில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
பொறுத்திருந்து பார்ப்போம் கூட்டுறவு சங்க பதிவாளர் நடவடிக்கையை!?
Для удобства на телефоне скачайте 1xslots apk и начните игру с бонусами.
Для игроков в слоты скачайте 1xslots на андроид и начните выигрывать с бонусами.
Начните игру с бонусами, используя промокод лаки джет.
Теперь вы можете скачать БК на Android и начать делать ставки на любые события в любое время
Узнайте больше о вывозе строительного мусора в Новосибирске https://progoroduhta.ru/vivoz-musora-novosibirsk
Попробуйте новый способ заработка, начав играть в Lucky jet и зарабатывать на азарте.
закачать приложения онлайн казино https://www.lrg.edu.in/r7-casino-oficialnyj-sajt-15/
загрузить приложения онлайн казино https://atiragusa.it/kazino-bez-vlozhenij-2024-igrat-onlajn-v-igrovyh-7/
Зарегистрируйтесь через 1xslots зеркало и начните выигрывать сегодня.
Особенности 1xSlots https://bodegascrial.es/pags/?1xslots-descargar-android-ios.html
Используйте 1xslots зеркало рабочее для непрерывного доступа к слотам.
Speel in het CorgiSlot casino https://jointjedraaien.nl/images/pages/?corgislot-casino_4.html