தொழில் துறை

வட மாநிலத்தைச் சேர்ந்தவர்களை வேலைக்கு வைத்திருக்கும் தமிழ் நாட்டில் உள்ள முதலாளிகள் மீது வழக்குகள் பதிந்து, 40-50 லட்சம் ரூபாய் வரை நூதன முறையில் மோசடி!?நிறுவனத்தில் கொடுமை படுத்துவதாகவும், சம்பளம் கொடுப்பதில்லை எனவும் உயர்நீதிமன்றத்தில் வழக்கு !?

சில ஆண்டுகளாக வட மாநிலங்களிலி ருந்து தென் மாநிலங்களுக்கு குறிப்பாக தமிழகத்தில் இருக்கும் தனியார் தொழிற்சாலைகள் மற்றும் கட்டிட வேலைகளுக்கு லட்சக்கணக்கானோர் வேலைக்கு வந்து தங்கி இருப்பதை கொரோனா காலத்தில் அனைவரும் அறிவோம்.



வட மாநிலத்தைச் சேர்ந்தவர்களை வேலைக்கு வைத்திருக்கும் தமிழ்நாட்டு சிறு, குறு தொழிலதிபர்கள் கவனமாக இருக்க எச்சரிக்கை!!?

ஜார்கண்ட், பீகார், ஒரிசா போன்ற மாநிலங்களில் உள்ள உயர்நீதிமன்றங்களில் வடமாநில தொழிலாளர்கள், தமிழ் நாட்டில் உள்ள முதலாளிகள் மீது வழக்குகள் பதிந்து, 40-50 லட்சம் ரூபாய் வரை நூதன முறையில் மோசடி செய்து பணம் பறித்து வருவதாக தற்பொழுது தகவல் தெரிய வந்துள்ளது.

நிறுவனத்தில் கொடுமை படுத்துவதாகவும், சம்பளம் கொடுப்பதில்லை எனவும் உயர்நீதிமன்றத்தில் வழக்கு பதிந்து வருகின்றனர். .

பணியிடத்தில் cellphone video மற்றும் photo எடுத்து உயர் நீதி மன்றத்தில் வழக்கு பதிவு செய்கின்றனர்.

தமிழ்நாட்டில் உள்ள முதலாளிகள் மீது அந்த மாநில உயர்நீதிமன்றம் பிடிவாரண்ட் கொடுப்பதால் சாதாரண சிவில் வழக்கு கிரிமினல் வழக்காக மாறி, அந்த மாநில போலீசார் வந்து இங்கு உள்ள முதலாளிகளை கைது செய்கின்றனர்.

பாட்னா மற்றும் ராஞ்சி உயர்நீதிமன்றத்தால் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டு முதலாளிகள் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
வழக்கிலிருந்து விடுவிக்க பெரிய தொகை பேரம் பேசுகிறார்கள் என்ற அதிர்ச்சித் தகவல் வந்துள்ளது.

தமிழ்நாட்டு சிறு, குறு தொழிலதிபர்கள் கவனமாக இருங்கள்.

தகவல்:
திரு R மனோகரன், ESI & PF மற்றும் தொழிலாளர் சட்ட வழக்கறிஞர் (Twitter பதிவு)
வடமாநிலத்தவரை வேலைக்கு வைத்திருப்பவர்கள் அதனை தவிர்க்க வேண்டுகிறோம்.

சொ.ராஜா B A.,L..L.B.,
மாநில அமைப்பாளர்
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை (இ)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button