பழனி கோவில் நிர்வாகத்தின் அலட்சியப் போக்கால் பக்தர்கள் தங்கும் விடுதியில் சானிடைசர் பேரல் வெடித்து பயங்கர தீ விபத்து! அதிர்ச்சி வீடியோ!
பழனி பாலதண்டாயுதபாணி கோவிலுக்கு சொந்தமான பக்தர்கள் தங்கும் விடுதியில் சானிடைசர் பேரல் வெடித்து சிதறிய விபத்தால் பரபரப்பு!
பழனி கோவில் நிர்வாகத்தின் பக்தர்கள் தங்கும் விடுதியில் சானிடைசர் பேரல் வெடித்து சிதறி எரியுமா அதிர்ச்சி வீடியோ !
பழனி முருகன் கோவிலுக்கு சொந்தமான தண்டபாணி நிலையம் தங்கும் விடுதியில் வைக்கப்பட்டிருந்த சானிடைசர் பேரல் வெடித்த விபத்தில் அருகில் நின்றிருந்த கார் முற்றிலும் எரிந்து நாசமானது. இந்த விபத்தில் துப்புரவு பணியில் ஈடுபட்டிருந்த இருவர் காயம் அடைந்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவிலுக்கு நால்வரும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். பழனி கோவிலுக்கு வரும் பக்தர்கள் தங்குவதற்கு வசதியாக திருக்கோவில் நிர்வாகத்திற்கு சொந்தமான தண்டபாணி நிலையம் இடும்பன் குடில் மற்றும் கிரி விதி கோசாலை ஆகிய இடங்களில் தங்கும் விடுதிகள் செயல்பட்டு வருகிறது. இந்த விடுதிகளில் ஊழியர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்கள் கைகளைச் சுத்தப்படுத்தும் சானிடைசர் பேரல் வைக்கப்பட்டுள்ளது. கோயில் நிர்வாக ஊழியர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்கள் கைகளைச் சுத்தப்படுத்த சானிடைசரை பயன்படுத்துவது வழக்கம். இந்நிலையில் பழனி பாலதண்டாயுதபாணி கோவிலுக்கு சொந்தமான தங்கும் விடுதியில் பிரதானமான தண்டபாணி நிலையத்தில் கேரளாவைச் சேர்ந்த குடும்பத்தினர் கடம்பன் இல்லம் பகுதியில் அறை எடுத்து தங்கி இருந்தனர். அவர்களது காரை அறைக்கு வெளியே நிறுத்தி வைத்திருந்தனர். இந்நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அவர்களது கார் அருகே தண்டபாணி நிலையம் துப்புரவு பணிகளுக்காக மூன்று பேரல்களில் வைக்கப்பட்டிருந்த சானிடைசர் பேரல் திடீரென வெடித்து தீப்பிடித்தது. இதில் சனிடைசர் தெறித்து அருகில் இருந்த கார் தீப்பிடித்து எறிய துவங்கியது. பேரில் வெடித்த சத்தம் கேட்டு அதிர்ச்சி அடைந்த பக்தர்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பழனி அடிவாரம் காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் காரில் தீ பிடித்து எரிவதை அணைக்க முயற்சித்தனர். இருப்பினும் சானிடைசரில் ஏற்பட்ட தீயை அணைப்பதில் மிகுந்த சிரமம் ஏற்பட்டது.
மேலும் இந்த விபத்தில் தண்டபாணி நிலையத்தில் துப்புரவு பணியில் ஈடுபட்டிருந்த பிட்சால் மற்றும் முருகன் ஆகிய இரு பணியாளர்கள் காயமடைந்தனர். காயமடைந்த இருவரையும் பழனி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். திடீரென தீப்பிடித்து இருந்தது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் பொதுவெளியில் வைக்கப்பட்டிருந்த சானிடைசர் பேரர்களை துப்புரவு பணியாளர்கள் திறந்தபோது எதிர்பாராத விதமாக வெடித்து அருகில் இருந்த கார் தீப்பிடிப்பு இருந்தது தெரியவந்துள்ளது. தொடர்ந்து கார் உரிமையாளர்கள் பழனி திருக்கோவில் நிர்வாகத்தின் அலட்சியப் போக்கால் தான் இந்த தீ விபத்து ஏற்பட்டதாக பாதிக்கப்பட்டவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். பாதிக்கப்பட்ட பக்தர்களை காவல்துறையினர் சமாதானம் கோவில் அடிவாரம் காவல் காவல்துறையினர் காவல் நிலையத்தில் முறைப்படி புகார் அளிக்குமாறு அறிவுறுத்தியதை தொடர்ந்து கார் உரிமையாளர்கள் அடிவாரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இது குறித்து பழனி கோவில் அடிவார காவல் நிலைய காவல்துறையினர் தீ விபத்து நடந்தது எப்படி என விசாரணை நடத்தி வருகின்றனர்.