பயணிகளை ஏற்றிச் சென்ற மினி பேருந்து வாடிப்பட்டி பாண்டியராஜபுரம் ரயில்வே கேட்ட அருகே கவிழ்ந்து விபத்து!
30 க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம்!

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பஸ் நிலையத்தில் இருந்து கருப்பட்டி கிராமத்திற்கு தனியார் மினி பஸ் சென்று விட்டு கணேசபுரம் பொம்மன்பட்டி கரட்டுப்பட்டி செல்லக்குளம் பெருமாள்பட்டி கிராமங்களில் பயணிகளை ஏற்றிக்கொண்டு மீண்டும் வாடிப்பட்டி பஸ் நிலையத்திற்கு காலை 10.30 மணிக்கு வந்து கொண்டிருந்தது. மினி பேருந்தை கரட்டுப்பட்டி தங்கவேல்(25) ஓட்டி வந்தார் பேருந்து நடத்துனராக கார்த்திக் (24) வாடிப்பட்டி பாண்டியராஜபுரம் ரயில்வே கேட் அருகே மினி பேருந்து வந்து கொண்டிருந்தபோது திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து

தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த முருகேஸ்வரி(60), முத்துச்செல்வன் (24), ஹேமா (40) ராஜேந்திரன்(36), தங்கவேலு (30) ஈஸ்வரி (40) உள்பட
சுமார் 30-க்கும் மேற்பட்ட பயணிகள் காயம் அடைந்தனர். தகவல் அறிந்த வாடிப்பட்டி போலீசார் 108 ஆம்புலன்ஸ் மற்றும் ஆட்டோக்கள் மூலம் காயம் அடைந்தவர்களை
மீட்டு வாடிப்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் பலத்த காயமடைந்தவர்கள் மதுரை அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். ரெண்டு பேர் கவலைக்கிடமாக உள்ளனர். இது குறித்து வாடிப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில் வாடிப்பட்டியில் கருப்பட்டி இரும்பாடி நாச்சிகுளம் பொம்மன் பட்டி கரட்டுப்பட்டி அம்மச்சியாபுரம் கணேசபுரம் சாலாச்சிபுரம் மேல் நாச்சிகுளம் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு பொதுமக்கள் சென்றுவர போதிய அரசு பேருந்து வசதி இல்லாததால் அந்த பகுதிகளுக்கு செல்லும் தனியார் மினி பேருந்துகளில் அதிகளவு பயணிகள் பயணம் செய்வதால் இதுபோன்ற விபத்துகள் ஏற்படுவதாக இந்த பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர் ஆகையால் சம்பந்தப்பட்ட பகுதிகளுக்கு உடனடியாக பேருந்து வசதியை அதிகப்படுத்த அரசு ஏற்படுத்தி தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.




