சினிமா

‘ஒற்றைப் பனை மரம்’(அக்டோபர் 25 முதல்)

சிறந்த இயக்குனர் விருது பெற்ற ”மண்” பட இயக்குனர் புதியவன் ராசையாவின் இயக்கத்தில் R S S S பிக்சர்ஸ் சார்பில் எஸ் தணிகை வேல் தயாரித்து உருவாகியுள்ள ஒற்றைப் பனை மரம் திரைப்படம் ஈழத்தில் போர் முடிவுறும் இறுதி நாட்களில் ஆரம்பிக்கும் இக்கதை, சமகால சூழலில் முன்னாள் போராளிகளும் மக்களும் சந்தித்துக் கொண்டிருக்கும் சொல்லத் துணியாத கருவை தெள்ளத் தெளிவாக நகர்த்தும் கதையாக ‘ஒற்றைப் பனை மரம்’ உருவாகியுள்ளது.

ஈழத்தில், கிளி நொச்சியிலுள்ள கிராமத்தில் எடுக்கப்பட்ட இயல்பான காட்சியமைப்பு
யதார்த்த நடிப்பு, இதயத்தை கனத்துப்போக வைக்கும் . உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் உருவாகியிருக்கும் இப்படத்திற்கு அஷ்வமித்ரா இசை அமைத்திருக்கிறார் .

தமிழ் பாரம்பரிய வாத்தியங்களை மட்டுமே வைத்து இசையமைத்திருப்பது படத்திற்கு ஒரு உயிரோட்டமாக அமைந்துள்ளது. அதனாலேயே சிறந்த இசையமைப்பாளர் விருதையும் பெற்றிருக்கிறார். பெற்ற இலங்கை ஒளிப்பதிவாளர் மகிந்த அபேசிங்க ஒளிப்பதிவையும் மேற்கொண்டுள்ளனர்.
40 சர்வதேச திரைப்பட விழாக்களில் தேர்வாகி, சிறந்த நடிகர், சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த இசை என 17 விருதுகளையும் குவித்திருக்கிறது. புதியவன் இராசையா, நவயுகா, அஜாதிகா புதியவன், மாணிக்கம் ஜெகன், தனுவன் ஆகிய புது முகங்கள் நடித்துள்ளனர். PRO குமரேசன். இப்படம் தமிழகம் முழுவதும் அக்டோபர் 25ஆம் தேதி வெளியாகிறது என பட தயாரிப்பு நிர்வாகம் தெரிவித்துள்ளது.PRO குமரேசன்.

Related Articles

Back to top button