காவல் செய்திகள்

அனுமதியின்றி சட்டவிரோதமாக மண் எடுத்துச் சென்ற லாரி உரிமையாளரிடம் பல லட்சம் பேரம் பேசும் கோவை மாட்டம் சிறுமுகை காவல் நிலையம்!?? நடவடிக்கை எடுப்பாரா மாவட்ட காவல் கண்காணிப்பாளர்!??

தமிழகம் முழுவதும் சட்டவிரோதமாக அனுமதியின்றி கிராவல் மண் திருடி விற்பனை செய்வதாக பல புகார்கள் வந்து கொண்டு இருக்கும் நிலையில்

தமிழகத்தில் கோவை மாவட்டத்திலிருந்து சமீபகாலமாக கேரளாவிற்கு எம்சான்ட் கல் கிராவல் மண் கடத்துவதாக பல குற்றச்சாட்டுகள் கோவை மாவட்ட ஆட்சியாளர் அலுவலகத்தில் இயங்கும் மைண்ட்ஸ் அதிகாரிகளுக்கும் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் கோவை மண்டல ஐஜி அவர்களுக்கும் பலமுறை புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று சமூக ஆர்வலர்கள் புலம்பி வரும் நிலையில்

இன்று சிறுமுகை காவல் நிலையத்திற்கு உட்பட்ட சின்ன கல்லுப்பட்டி என்ற இடத்தில் ஜேசிபி இயந்திரங்கள் மூலம் பல டாரஸ் லாரிகளை வைத்து சட்டவிரோதமாக அனுமதியின்றி கிராவல் மண் எடுத்து விற்று வருவதாக சமூக ஆர்வலர்கள் சிறுமுகை காவல் நிலையத்திற்கு புகார் கொடுத்ததன் அடிப்படையில் சிறுமுகை காவல்துறை சம்பவ இடத்திற்குச் சென்று நான்கு லாரிகளையும் ஒரு ஜேசிபி இயந்திரத்தையும் பறிமுதல் செய்து காவல் நிலையத்தில் நிறுத்தி வைத்துள்ளனர். எந்தவித அனுமதியும் இல்லாமல் மண் அள்ளியதாகவும் தற்போது தெரியவந்துள்ளது. காவல்துறை பிடித்தவுடன் மண் எடுக்க அனுமதி கேட்டு கலாமணி என்பவர் கோவை மாவட்ட மைன்ஸ் துறையில் அனுமதிச் சீட்டு கேட்டு வருவதாகவும் அவருக்கு அரசு அனுமதிச் சீட்டு தர மறுத்ததாக தகவல் வந்துள்ளது . அனுமதி சீட் கொடுக்க மறுக்கப்படுவதாக தெரிந்துகொண்ட காவல்துறையினர் பல லட்சங்கள் கேட்டு பேரம் பேச படுவதாகவும் தகவல்கள் வந்துள்ளது. எது எப்படியோ சட்டவிரோதமாக அனுமதி இல்லாமல் பட்டா நிலங்களில் கிராவல் மண் எடுத்து விற்பனை செய்பவர்கள் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டிய காவல்துறை இதுபோன்று சட்டவிரோதமாக பேரம்பேசி லஞ்சம் பெற்றுக் கொண்டு லாரிகளை விடுவதால்தான் இதுபோன்று சட்டவிரோதமாக அனுமதி இல்லாமல் தொடர்ந்து மண் எடுத்து விற்பனை செய்து சமூக விரோதிகள் அரசுக்கு எதிராக தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது!
தற்போது பிடித்துள்ள லாரிகளை ஜேசிபி இயந்திரங்களை சட்டப்படி வழக்குப்பதிவு செய்து இதுபோன்று அனுமதி இல்லாமல் சட்டவிரோதமாக மண் எடுத்துச் செல்லும் நபர்கள் மீதும் லாரி உரிமையாளர்கள் மீதும் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஒப்படைத்து அவர்களுக்கு தக்க தண்டனை பெற்றுக் கொடுத்தால் மட்டுமே கோவை மாவட்டத்தில் சட்டவிரோதமாக நடக்கும் மணல் கொள்ளையை தடுத்து நிறுத்தப்படும் இதற்கு மாவட்ட ஆட்சியர் மாவட்ட கண்காணிப்பாளர் துரிதமாக நேர்மையான அதிகாரிகளை நியமித்து நடவடிக்கை எடுத்தால் மட்டுமே சாத்தியம் என்று சமூக ஆர்வலர்கள் கூறி வருகின்றனர்.

Related Articles

14 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button