விருதுநகர்

ஒரு கோடி மதிப்பில் புறநகர் பேருந்து நிலையம்!

வெளியூரில் இருந்துவரும் வெகுதூரம் செல்லும் பேருந்துகள் அருப்புக்கோட்டை புறநகர் பகுதி நேரு நகரில் நின்று செல்ல பொது மக்கள் இறங்கிக்கொள்ளவும் அங்கிருந்து ஏறி வெளியூர் செல்வதற்கு வசதிக்காக புதிய பேருந்து நிறுத்துமிடத்தை நகராட்சி மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் 90 லட்சம் ரூபாய் செலவில் புதிதாக புறநகர் பேருந்து நிலையம்அமைக்கப்பட்டது!

அந்த புறநகர் பேருந்து நிலையத்தை 30/07/21 மாவட்ட ஆட்சியர் தலைமையில்
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் அவர்கள் பொது மக்கள் பயன்பாட்டிற்கு திறந்துவைத்த போது!

பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களிடமிருந்து, வருமானச்சான்றிதழ் ஃ சாதிச் சான்றிதழ் கோரி பெறப்படும் மனுக்கள் மீது எவ்விதக் காலதாமதமின்றி உடனடியாகப் பரிசீலித்து, அவர்களுக்குச் சான்றிதழ்கள் வழங்க வட்டாட்சியர்கள் மற்றும் கோட்டாட்சியர்கள் மூலம் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
தற்போது, கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடந்துகொண்டு இருப்பதால் நிலுவையில் உள்ள மனுக்களை ஆய்வுசெய்து, மாணவர்களுக்குத் தேவையான சான்றிதழ்கள் உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அனைத்து இ-சேவை மையங்களிலும் மாணவர்கள் சான்றுகளைக் கூட்ட நெரிசல் இன்றிப் பெற்றுச் செல்ல ஏதுவாகக் குறிப்பிட்ட நாட்களை அதற்கென ஒதுக்கி, எவ்வித இடையூறு இன்றிச் சான்றிதழ்கள் வழங்கப்படும் என்றும், சான்றுகளை வழங்குவதில் தேவையற்ற கால தாமதத்தினைத் தவிர்த்து, குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் தவறாது சான்றுகள் வழங்கப்படுவதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும், தேவையின்றி மாணவர்களை அலைக்கழிக்கக் கூடாது என்றும் மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் .கே.கே.எஸ்.எஸ்.ஆர்.இராமச்சந்திரன் அவர்கள் தெரிவித்தார்கள்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் இரா.மங்களராமசுப்பிரமணியன், திட்ட இயக்குநர் (மா.ஊ.வ.மு) .திலகவதி, அருப்புக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் கல்யாணகுமார், அருப்புக்கோட்டை நகராட்சி ஆணையாளர் திரு.அசோக்குமார், அருப்புக்கோட்டை வட்டாட்சியர் ரவிச்சந்திரன், நகராட்சி பொறியாளர் முகம்மது சாகுல் ஹமீது மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button