கொரோனா தொற்று தடுப்பு விழிப்புணர்வு பிரச்சாரம்
இன்று (02.08.2021) காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் கொரோனா பெருந்தொற்றுப் பரவலை தவிர்க்கும் நோக்கில் கொரோனா விழிப்புணர்வு தொடர் பிரச்சார வார விழாவில் மாவட்ட ஆட்சியர் அவர்கள் கலந்து கொண்டு கொரோனா விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் மற்றும் மக்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 31.07.2021 அன்று கொரோனா விழிப்புணர்வு தொடர் பிரச்சார வார துவக்க விழாவை சென்னையில் தொடங்கி வைத்தார். அதன் தொடர்ச்சியாக இன்று காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் மா.ஆர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் கொரோனா விழிப்புணர்வு மாபெரும் கையெழுத்து இயக்கத்தை பதாகையில் கையெழுத்திட்டு, பொதுமக்களுக்கு முகக்கவசங்கள் மற்றும் கொரோனா விழிப்புணர்வு குறித்த துண்டு பிரசுரங்களையும் கபசுர குடிநீரை வழங்கினார். அதனைத் தொடர்ந்து, காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களிடம் கொரோனா நோய்த்தொற்றிலிருந்து தற்காத்துக்கொள்ள முகக்கவசம், கிருமி நாசினி மற்றும் கைகளை சுத்தமாக வைத்திருக்கும் முறையை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். அதன் பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பொதுமக்களுக்கு கட்டாயம் முக கவசம், சமூக இடைவெளியை கடைபிடித்தல், பொது இடங்களில் கூட்ட நெரிசலை தவிர்த்தல், கை கழுவும் முறை மற்றும் கைகளை சுத்தம் செய்வது போன்ற அரசு அறிவித்த கொரோனா நோய்த்தொற்றிலிருந்து தற்காத்துக்கொள்ள விழிப்புணர்வு அறிவுரைகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.சுதாகர், உணவுப் பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் மரு.அனுராதா மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.கொரோனா