Uncategorized

ராமதாஸ் ஆக்கிரமித்துள்ள வன்னியர் கல்வி அறக்கட்டளையை மீட்டுத் தர முதல்வரிடம் கோரிக்கை!

இரண்டு கோரிக்கைகளை முதல்வரிடம் வைத்த காடுவெட்டி குரு மகள்

குரு.விருதம்பிகை

கோரிக்கை 1

இந்து நாடார் மற்றும் கிறிஸ்டின் நாடார் என்ற ஒரு சமூகத்தின் இரு பிரிவுகள் பிற்படுத்தப்பட்டோர்(BC)பிரிவில் உள்ளது போல்.. கிறிஸ்டியன் வன்னியரை பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் இருந்து நீக்கி தற்போது அரசாணை வெளியிடப்பட்டுள்ளதை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் வன்னியர்( v) பிரிவில் சேர்க்க வேண்டும்

கோரிக்கை.2

டாக்டர் இராமதாஸ் அவர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள வன்னியர் கல்வி அறக்கட்டளையை மீட்டு வன்னியர் பொதுச் சொத்து நல வாரியத்தில் முழுமையாக இணைக்க வேண்டும் . என்று

தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு திரு. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களை சந்தித்து தற்போது நடைபெற்ற 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத அரசாணையை வெளியிட்டதால் அதன் பயனை உணர்ந்த ஒட்டுமொத்த வன்னியர் சமுதாயமும் திராவிட முன்னேற்றக் கழகக் தலைமையிலான கூட்டணி அரசுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர் என்பதை முதல்வரிடம் கூறி என்றும் வன்னியர் சமுதாயம் திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான கூட்டணிக்கு உறுதுணையாக இருக்கும் என்று கூறினோம்.

மேலும் ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றதற்கு வாழ்த்துக்கள் கூறினோம்.பிறகு இரண்டு கோரிக்கைகளையும் வைத்தோம்.இரண்டு கோரிக்கைகளையும் தமிழ்நாடு முதல்வர் பரிசீலனை செய்வதாகவும் கூறினார்.

குரு விருதாம்பிகை

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button