வேலை செய்த கூலி கேட்ட மூதாட்டி மற்றும் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த மூதாட்டி இரண்டு பேரை கொடூரமாக கொலை செய்த கொடூரன்! துப்பாக்கியால் சுட்டுப் பிடித்த சங்ககிரி காவல் உதவி ஆய்வாளர்!
பாராட்டும் பொதுமக்கள்!

சேலம் மாவட்டம் சங்ககிரி காவல் நிலையத்திற்கு உட்பட்ட
இளம்பிள்ளை மகுடஞ்சாவடி அருகே உள்ள தூதனூா், காட்டுவளவு பகுதியில் உள்ள கல்குவாரி
கடந்த 4ஆம் தேதி இருவரின் சடலங்கள் இருப்பதாக மகுடஞ்சாவடி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அத்தகவலின் பேரில் போலீசார் விரைந்து சென்று

சடலங்களை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டபோது, அவர்கள் இருவரும் அதே பகுதியைச் சேர்ந்த
பாவாயி (70) மற்றும் பெரியம்மாள் (75)
கூலித்தொழிலாளர்கள் என தெரியவந்தது.
அவர்களின் சடலங்களை

பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மருத்துவ பிரேதப்பரிசோதனையில் கழுத்தை இறுக்கி இரண்டு பேர் கொலை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது.
பின்னர் போலீசார் மேற்கொண்ட தீவிர விசாரணையில் மூதாட்டிகள் இருவரும் அணிந்திருந்த தங்க நகைகள் தலா ஒரு பவுன் தங்க தோடு, வெள்ளி கால் காப்புகளை
காணவில்லை என தெரிய வந்தது. இந்நிலையில் மூதாட்டிகள் இருவரும் நகைக்காக கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகத்தின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்த இரட்டை கொலை சம்பவத்தில் கொலையாளிகளைப் பிடிக்க சேலம் மாவட்ட எஸ்பி (பொ) விமலா உத்தரவின்பேரில் சேலம் காவல் துணை காவல் கண்காணிப்பாளா் சோமசுந்தரம் தலைமையில் காவல் ஆய்வாளா்கள் செந்தில்குமாா் (மகுடஞ்சாவடி), ரமேஷ் (சங்ககிரி), சண்முகம் (தம்மம்பட்டி) ஆகியோரைக் கொண்ட 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில்
நகைக்காக இந்த இரட்டை கொலை செய்து உடல்களை குவாரி தண்ணீரில் வீசியிருக்கலாம் என சந்தேகத்தின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து
இளம்பிள்ளை, இடங்கணசாலை, கே.கே.நகா் பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து வந்தனர் .

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே காமலாபுரம் கிழக்கத்திக்காடு கிராமத்தை சேர்ந்த
அய்யனாா்
55) என்பவர், அப்பகுதியில் இறந்த மூதாட்டி பாவாயி குடும்பத்திற்கு சொந்தமான 3 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்து, அங்கே குடிசை போட்டு தங்கி விவசாய வேலை செய்ததும், மூதாட்டிகள் மாயமான நாளில் இருந்து அவர் செல்போனை சுவிட்ச்ஆப் செய்துவிட்டு தலைமறைவாக இருந்ததால் அய்யனாருக்கு இந்த கொலையில்
தொடர்பு இருக்கலாம் என காவல்துறையினர் அவரை தேடி வந்த நிலையில், சங்ககிரி அருகே உள்ள ஒருக்காமலை பகுதியில் குற்றவாளி அய்யனார் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து மகுடஞ்சாவடி காவல் ஆய்வாளர் செந்தில்குமார் தலைமையில் உதவி ஆய்வாளர் கண்ணன் மற்றும் தலைமை காவலர்கள் அழகு முத்து, கார்த்திகேயன் ஆகியோர் குற்றவாளி பதுங்கியிருந்த இடத்தை சுற்றி வளைத்தனர்.
அப்போது குற்றவாளி அய்யனார் உதவி ஆய்வாளர் கண்ணன் வலது கையில் கத்தியால் குத்திவிட்டு தப்பிக்க முயற்சி செய்தபோது

காவல் உதவி ஆய்வாளர் கண்ணன் துப்பாக்கியால் சுட்டதில் குற்றவாளி அய்யனாரின் வலது வலது முழங்காலுக்கு கீழ் துப்பாக்கி குண்டு பாய்ந்து சுருண்டு விழுந்தார்.
இதையடுத்து

கொலை செய்த குற்றவாளி அய்யனாரை மீட்ட போலீசார் உடனடியாக சங்ககிரி அரசு மருத்துவமனையில் அனுமதித்தினர்.
பின்னர்,மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சங்ககிரி காவல் நிலைய உதவி காவல் ஆய்வாளர் கண்ணனிடம் சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (பொறுப்பு) விமலா தொலைபேசி மூலம் நலம் விசாரித்தார்.
மற்றும் துணை காவல் கண்காணிப்பாளர் கண்காணிப்பாளர் தனசேகர் ஆய்வாளர் ரமேஷ் ஆகியோர்
அய்யனாரிடம் நடத்திய விசாரணையில், தான் குத்தகைக்கு எடுத்துள்ள விவசாய நிலத்தில் வேலை பார்த்த மூதாட்டி பாவாயி, கூலி கேட்டு வந்தார். ஆனால், பணத்தை கொடுக்காமல் ஏமாற்றி வந்தேன். சம்பவத்தன்று கூலியை கேட்டு தொந்தரவு செய்ததால், அவரது கழுத்தை நெரித்து கொன்றேன். அதனை ஆடு மேய்த்துக்கொண்டிருந்த மற்றொரு மூதாட்டி பெருமாயி பார்த்துவிட்டார். அவர், ஊராரிடம் தெரிவித்து அழைத்து வருவதாக கூறியதால், அவரை விரட்டி பிடித்து அவரது கழுத்தையும் நெரித்து கொன்று, பிறகு 2 பேரின் காதில் கிடந்த தங்க தோடுகள், காலில் கிடந்த வெள்ளி காப்புகளை கழற்றிவிட்டு, கல்குவாரி குட்டையில் தூக்கி வீசியதாக தெரிவித்ததாக போலீசார் கூறினர்.
* மூதாட்டிகளை பலாத்காரம் செய்து கொல்வது வாடிக்கை
ரவுடி அய்யனார் மீது ஏற்கனவே 5 கொலை வழக்குகள் பதிவாகியுள்ளது. 2 கொலை வழக்குகள், இதேபோன்று மூதாட்டிகளை கொன்று நகை பறித்ததாகும். மூதாட்டிகளை குறிவைத்து பலாத்காரம் செய்து கொலை செய்வதை வாடிக்கையாக கொண்ட அய்யனாருக்கு 2004ல் ஒருகொலை வழக்கில், ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. அதில் 13 ஆண்டுகள் தண்டனையை அனுபவித்த அவர், நன்னடத்தை காரணமாக கடந்த 21.9.2018ல் விடுதலையாகி வெளியே வந்துள்ளார். பின்னர் தூதனூர் இ.காட்டூர் பகுதியில் 3 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்து, அதில் விவசாயம் செய்துள்ளார். சிறையில் இருந்து வெளியே வந்த 7 ஆண்டுக்கு பின் மீண்டும் 2 மூதாட்டிகளை கொன்று தற்போது சிக்கிக்கொண்டுள்ளார்.
அதேபோல் கொலையான பெருமாயி உடலை தூக்கி கல்குவாரி குட்டையில் போட ரவுடி அய்யனாரின் கூட்டாளியான தூதனூரை சேர்ந்த பூபதி (53) என்பவர் உதவியது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
மேலும்
சேலம் மாநகரில் கொண்டலாம்பட்டி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கடந்த 15 நாட்களுக்கு முன் மூதாட்டி ஒருவர் நகைக்காக கொலை செய்யப்பட்டார். அதேபோல், காரிப்பட்டி பகுதியில் 25 நாட்களுக்கு முன் ஒரு மூதாட்டியை கொன்று நகை பறிக்கப்பட்டுள்ளது. இந்த 2 கொலை வழக்கிலும் அய்யனாருக்கு தொடர்பு உள்ளதா என விசாரணை நடக்கிறது.
நகைக்காக மூதாட்டிகள் இருவரை கொடூரமாக கொலை செய்து
கல்குவாரியில் வீசி விட்டு தலைமறைவாக இருந்த ரவுடியை
சங்ககிரி போலீசார் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்துள்ள சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.




