காவல் செய்திகள்

30 வயதில்
எட்டு குழந்தைகள்?!??
ஒரு ஆண் குழந்தையுடன் பெண் தலைமறைவு!!?
இரண்டு மாத குழந்தையை விற்றுவிட்டாரா என்ற சந்தேகத்தில்
அரசு ஆரம்ப சுகாதார நிலைய அலுவலர் மதுரை மாவட்டம் வாடிப்பட்டி காவல் நிலையத்தில் புகார்!

30 வயதில்
எட்டு குழந்தைகள்?!??
ஒரு ஆண் குழந்தையுடன் தலைமறைவு!!?
இரண்டு மாத குழந்தையை விற்றுவிட்டாரா என்ற சந்தேகத்தில்
அரசு ஆரம்ப சுகாதார நிலைய அலுவலர் வாடிப்பட்டி காவல் நிலையத்தில் புகார் ! இரண்டு மாதா குழந்தை கண்டுபிடிப்பு!

இரண்டு மாத குழந்தையுடன் தாய் காணவில்லை காவல்நிலையத்தில் ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர் புகார்!

வாடிப்பட்டி காவல் நிலையம்

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே ஆண்டிபட்டி ஊராட்சிக்குப்பட்ட சின்னமநாயக்கன்பட்டியைச் சேர்ந்தஅங்கம்மாள் இரண்டாவது கணவர் (வயது 30) சின்ன கருப்பு (வயது 35) (லேட்)
நிறைமாத கர்ப்பிணி யாக இருந்த அங்கம்மாள் குழந்தை பேறுக்காக கடந்த மார்ச் மாதம் 3 ஆம் தேதி சித்தாலங்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்க்கப் பட்டார். வலி அதிகமாக இருந்ததால் சுகப்பிரசவம் செய்ய இயலாத நிலையில்
அறுவை சிகிச்சை மூலம் தான் குழந்தை எடுக்க முடியும் என்ற நிலையில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி விட்டதாகவும் அங்கு அறுவை சிகிச்சை மூலம் பெண் குழந்தை பிறந்ததாகவும் . 9ஆம் தேதி மதுரை அரசு மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்து வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் குழந்தை மற்றும் தாய் விவரங்களை சித்தாலங்குடி ஆரம்ப சுகாதார மையத்திற்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் அதன்பின் சித்தாலங்குடி ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர்கள் வாடிப்பட்டி அருகே உள்ள ஆண்டிபட்டி ஊராட்சிக்குட்பட்ட சின்னமநாயக்கன்பட்டி யில் அங்கம்மாள் வீட்டுக்கு சென்று குழந்தைக்கு மாதாந்திர மருத்துவ பரிசோதனை செய்து வந்துள்ளனர்.
இதில் பாதுகாவலர் இல்லாத காரணத்தினால் மருத்துவத்துறை பரிந்துரையின்படி ஏற்கனவே ஒரு ஆண் குழந்தைஊடன் பிறந்த பெண் குழந்தை இரு குழந்தைகளுடன் தனியார் தங்கும் விடுதியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டார் என்ற தகவல் வந்துள்ளது.. இந்நிலையில் திடீரென்று அங்கிருந்து புறப்பட்டு சின்னமநாயக்கம்பட்டியில் உள்ள அவரது வீட்டிற்கு குழந்தையுடன் வந்து விட்டார்என்றும் ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர் குழந்தைக்கு மாத தடுப்பூசி செலுத்த சென்றபோது குழந்தை வீட்டில் இல்லாததால் குழந்தை எங்கே என்று கேட்டபோது உறவினர் வீட்டில் இருப்பதாக கூறியுள்ளார் . இரண்டு மாத குழந்தையை உறவினர்களிடம் ஒப்படைத்ததாக உண்மைக்குப் புறம்பாக கூறியுள்ளார்.அதன் பின்பு குழந்தையை அழைத்து வருவதாக கூறி சென்றவர் மீண்டும் தன்னுடைய சென்னமநாயக்கன்பட்டி வீட்டிற்கு திரும்பவில்லை என்றும்
தலைமறைவாகி விட்டார். இது சம்பந்தமாக சித்தாலங்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர்கீர்த்திகா கொடுத்த புகாரின் பேரில் வாடிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கனகசபாபதி வழக்கு பதிவு செய்து துரித விசாரணை செய்ததில் கண்ணன் என்
நபர் மூலம் ஜெயலட்சுமி என்ற பெண்ணுக்கு அங்கம்மாளின் குழந்தையை தத்து கொடுத்ததாக தகவல் வந்ததன் அடிப்படையில் வாடிப்பட்டி காவல்துறை துரிதமாக செயல்பட்டு இரண்டு மாத குழந்தையை தற்போது கண்டுபிடித்து அரசு ஆரம்ப சுகாதார நிலைய செவிலியரிடம் ஒப்படைத்து உள்ளதாக தகவல்.
அங்கம்மாள் என்ற பெண் இரண்டு பேரை திருமணம் செய்ததாகவும் இரண்டு கணவரும் தற்போது உயிருடன் இல்லை என்றும் தகவல் வந்துள்ளது.சுமார் 30 வயது உடைய அங்கம்மா இதுவரை ஏழு குழந்தைகளை பெற்றுள்ளதாக அதிர்ச்சித் தகவலும் வந்துள்ளது. அப்பா இல்லாத நிலையில் குழந்தை பிறந்துள்ளது என்ற அதிர்ச்சித் தகவலும் வந்துள்ளது அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது 2மாத குழந்தைக்கு அப்பா யார் என்று தெரியாத நிலையில் வாடிப்பட்டி காவல் ஆய்வாளர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .
அதுமட்டுமில்லாமல் அங்கம்மாள் என்ற பெண் தற்போது சோழவந்தான் முள்ளிப் உள்ளத்தில் இருப்பதாக தகவல் வந்துள்ளது.

எது எப்படியோ இப்போது குழந்தையை தத்து எடுப்பதற்கு அரசே, சட்டப்பூர்வமான வடிவம் கொடுத்திருக்கிறது.
தத்து எடுத்தலை இரண்டு வழிமுறைகளில் மேற்கொள்ளலாம்.
(1) தத்து எடுக்க விரும்பும் பெற்றோர்கள், தத்து கொடுக்க விரும்பும் பெற்றோரிடம் இருந்து தத்தெடுப்பது. இந்தமுறை மிகவும் எளிதானது.
இந்து, பவுத்தம், சீக்கியம், ஜெயின் மதங்களைச் சேர்ந்தவர்கள் ‘இந்து தத்தெடுத்தல் மற்றும் பராமரித்தல் சட்டம்-1956’ (Hindu adoptions and maintenance act, 1956) மூலமாகவும், முஸ்லிம், கிறிஸ்தவ மதங்களை சார்ந்தவர்கள் ‘கார்டியன்ஸ் அன்டு வார்ட்ஸ் ஆக்ட்-1890’ (Guardians and Wards Act, 1890) மூலமாகவும் குழந்தைகளை தத்தெடுக்கலாம்.

இதற்கான வழிமுறைகள் எளிதானவையாகும்.

தத்து எடுக்கும் மற்றும் கொடுக்கும் பெற்றோர்கள், இதன்மூலம் தத்தெடுப்பதற்கான பத்திரம் (Adoption Deed) ஒன்றினை பதிவு செய்து கொள்ளலாம். ஆனால், பதிவு செய்வதற்குமுன் இதன் சம்பிரதாயங்களை முடிப்பது அவசியம்.
சம்பிரதாய முறைப்படி எவ்வாறு திருமணங்கள் செய்யப்பட்டு பதிவு செய்யப்படுகிறதோ, அதேபோல தத்தெடுப்பதும் பதிவு செய்யப்படுகிறது. Adoption Deed பதிவு செய்யப்படுவதே தத்து எடுப்பதற்கான சாட்சி ஆகும்.

(2) தத்து எடுப்பதற்கான மற்றொருவழி சற்று அரிய வழிமுறை ஆகும். ஏனெனில், தற்போதைய காலகட்டத்தில் யாரும் தன் குழந்தைகளை தத்து கொடுப்பதற்கு முனைவதில்லை.
தத்து எடுக்கப்படும் குழந்தைகளை சட்டத்திற்கு புறம்பான செயல்களுக்கு உட்படுத்தப்படுவதை தவிர்ப்பதற்காகவும், குழந்தைகளின் எதிர்கால நல்வாழ்வுக்காகவும் இந்த சட்ட வழிமுறைகள் சற்றே கவனத்துடன் இயற்றப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது.

இந்த வழிமுறையானது பின்வரும் சட்டங்களைப் பின்பற்றிச் செயல்படுகிறது.

1. Guidelines Governing Adoption of Children 2015
2. Juvenile Justice (Care and Protection of Children) Act, 2000
3. Hague Convention on the Protection of Children and Co-operation in Respect of Inter-country Adoption Act, 1993.

குழந்தையை தத்து எடுக்க தகுதிகள்:

தத்து எடுக்க விரும்பும் பெற்றோர்கள் நல்ல மனநிலையுடனும், உடல்நிலையிடனும், பொருளாதார நிலையிடனும் இருக்க வேண்டும்.

திருமணம் ஆனவர்களும், திருமணம் ஆகாதவர்களும் தத்தெடுக்க முடியும்.

தனி பெண்மணி குழந்தையை (பெண்பால் / ஆண்பால்) தத்தெடுக்க முடியும்.

தனி ஆண்மகன், பெண் குழந்தையை தத்தெடுக்க முடியாது.

திருமணமான தம்பதியர் குறைந்தது இரண்டு ஆண்டுகால திருமண வாழ்க்கைக்கு பிறகே தத்தெடுக்க முடியும்.

வயது விதிமுறைகள்:

4 வயது வரையிலான குழந்தையை தத்தெடுக்க விரும்பும் தம்பதியரின் கூட்டு வயது 90க்கு மிகாமல் இருக்க வேண்டும். அதுவே தனி பெற்றோராக இருக்கும்பட்சத்தில் 45 வயதுக்குள் இருக்க வேண்டும்.

4 முதல் 6 வயது வரையிலான குழந்தையை தத்தெடுக்க விரும்பும் கணவன், மனைவி ஆகிய இருவரின் கூட்டு வயது 100க்கு மிகாமல் இருக்க வேண்டும். தனி பெற்றோராக இருந்தால் 50 வயது வரை இருக்கலாம்


8 முதல் 18 வயது வரையிலான குழந்தையை தத்தெடுக்க விரும்பும் தம்பதியரின் கூட்டு வயது வரம்பு 110க்கு மிகாமல் இருக்க வேண்டும். தனி பெற்றோராக இருந்தால் 55 வயது வரை இருக்கலாம்.

குழந்தை மற்றும் தத்து எடுக்க விரும்பும் பெற்றோரில் யாரேனும் ஒருவரது வயது இடைவெளி 25 வயதுக்கு மேல் இருக்க வேண்டும்.

4 குழந்தைகளுக்கு மேல் ஒருவர் / தம்பதியினர் தத்தெடுக்க முடியாது.

இந்தியா மற்றும் வெளிநாட்டவர் இந்தமுறை மூலம் முறையான அனுமதியுடன் தத்தெடுக்கலாம்.

செயல்முறைகள்:

1. தத்தெடுக்க விரும்பும் பெற்றோர்கள் தங்கள் விண்ணப்பத்தை பதிவு செய்ய வேண்டும்.

2. ‘காரா’ (CARA- Central Adoption Resource Authority) வலைதளத்தில் (cara.nic.in) அதற்கான விண்ணப்பம் கிடைக்கும். இணையத்தின் மூலம் பதிவு செய்யலாம்.

3. விண்ணப்பம் பதிவு செய்த நாளில் இருந்து 2 ஆண்டுகளுக்குப் பிறகு புதுப்பிக்க வேண்டும்.
4. அரசாங்கத்தால் இதற்கான அனுமதி வழங்கப்பட்ட அனாதை இல்லம், ஆதரவற்ற அமைப்புகள், தன்னார்வ விடுதிகள் (என்ஜிஓ) மூலம் பெற்றோர்கள் இல்லாத குழந்தைகளின் புகைப்படங்கள் வலைதளத்தில் காண்பிக்கப்படும்.

5. தாங்கள் விரும்பும் குழந்தையை தேர்வு செய்ய முடியும்.

6. இதற்காக அமைக்கப்பட்ட குழு, தத்தெடுக்கப்பட்ட பெற்றோரின் மருத்துவ, உடல்நிலை, மனநிலை, பொருளாதார நிலை, வாழ்க்கைச்சூழல் ஆகிய அம்சங்களை ஆராய்ந்து அறிக்கையை அளிக்கும்.

7. தகுதியான பெற்றோர் குழந்தையை தத்து எடுத்தவுடன் அரசு சாரா இயக்கம் அல்லது இல்லம் குழந்தையை தத்து கொடுப்பதற்கான நீதிமன்ற உத்தரவைப் பெற வேண்டும். இவ்வாறு குழந்தையைத் தத்தெடுக்கலாம்.
இதற்கு குறைந்தபட்சம் 6 மாதம் முதல் 2 ஆண்டுகள் வரை ஆகலாம். தத்தெடுக்கப்பட்ட குழந்தையின் வாழ்க்கைமுறை அவர்களின் 18 வயது வரை கண்காணிக்கப்படும்.
இடையில் ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால், குழந்தையை திரும்பப்பெற்றுக்கொள்ளும் அதிகாரம் அரசுக்கு உண்டு

குழந்தைகளை பெற்று சம்பாதிக்கும் நோக்கத்தில் சட்டவிரோதமாக குழந்தைகளை விற்று வருவதாக யார் செயல்பட்டாலும் அவர்களை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து தகுந்த தண்டனை வழங்க வேண்டும் என்பது தான் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை ஆகும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button