டாஸ்மாக் கடைகளை மூட அதிரடி உத்தரவு!

இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடிக்கு செல்லும் விருதுநகர் மாவட்ட வழித்தடங்களில் அமைந்துள்ள டாஸ்மாக் சில்லரை விற்பனைக் கூடங்கள் மற்றும் அதனுடன் இணைந்த மதுபானக் கூடங்களை 11.09.2021 அன்று ஒருநாள் மட்டும் தற்காலிகமாக மூட உத்தரவு – மாவட்ட ஆட்சியர் தகவல்.
இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் 11.09.2021 ஆம் தேதியன்று நடைபெறவுள்ள 64-வது இமானுவேல் சேகரன் நினைவு தினத்தினை முன்னிட்டு, விருதுநகர் மாவட்டத்தில் சட்டம் ஓழுங்கைப் பராமரிக்கும் பொருட்டும், முன்னேற்பாடு நடவடிக்கைகள் மேற்கொள்ளும் பொருட்டும், பாதுகாப்பின் ஒருபகுதியாக, 11.09.2021 அன்று ஒருநாள் மட்டும் இராஜபாளையம் வட்டம் முதல் திருச்சுழி வட்டம் வரை, சாத்தூர் மற்றும் சிவகாசி தாலுகா முதல் திருச்சுழி தாலுகா வரை விருதுநகர் மாவட்ட வழித்தடங்களில் அமைந்துள்ள டாஸ்மாக் சில்லரை விற்பனைக் கூடங்கள் மற்றும் அதனுடன் இணைந்த மதுபானக் கூடங்கள் மற்றும் F.L.2 , F.L.3 மதுபான உரிம ஸ்தலங்களை தற்காலிகமாக மூடுவதற்கு விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அவர்களால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், மேற்படி உத்தரவினை மீறி செயல்படும் டாஸ்மாக் நிறுவனப் பணியாளர்கள் (F.L-1) மற்றும் F.L-2/F.L-3/ F.L-3A /FL-3AA மதுபான ஸ்தலங்களின் உரிமதாரர்களின் மீது The Tamil Nadu Liquor (Licence and Permit) Rules, 1981-ன்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சியர்.ஜெ.மேகநாதரெட்டி.,இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.





Please let me know if you’re looking for a author for
your weblog. You have some really good articles and I believe I would
be a good asset. If you ever want to take some of
the load off, I’d love to write some material for your blog
in exchange for a link back to mine. Please send me an e-mail if interested.
Kudos!