மாவட்டச் செய்திகள்

      CSR Fund -ரூ.40,000/- மதிப்பில்  மாற்றுத்திறனாளி தனிநபர் இல்ல கழிப்பறை!

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், பாலவநத்தம் ஊராட்சியில் (24.07.2021) செல்வி. காளீஸ்வரி என்ற மாற்றுதிறனாளி நபர் பயன்படுத்துவதற்கு ஏதுவாக மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மூலம் CSR Fund -ல் ரூ.40,000/- மதிப்பில் கட்டப்பட்டு முடிவடைந்த நிலையில் அந்த மாதிரி மாற்றுத்திறனாளி தனிநபர் இல்ல கழிப்பறையை மாவட்ட ஆட்சியர் ஜெ.மேகநாதரெட்டி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

5 பெண் பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு மாதிரி தனிநபர் இல்ல கழிப்பறை கட்ட திட்டமிடல்

விருதுநகரில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் மக்கள் நலன் சார்ந்த புதிய முயற்சியாக மாற்றுதிறனாளி பயன்பெறும் வகையில் மாதிரி தனிநபர் இல்ல கழிப்பறையை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மூலம் CSR Fund -ல் கட்டுவதற்கு திட்டமிடப்பட்டு, அதனை மாற்றுத்திறனாளி நலத்துறையின் மூலமாக அடையாள அட்டை பெற்ற விருதுநகர், காரியாபட்டி, சாத்தூர், அருப்புக்கோட்டை ஆகிய ஊராட்சி ஒன்றியங்களை சார்ந்த 5 பெண் பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு மாதிரி தனிநபர் இல்ல கழிப்பறையை கட்டப்பட்டு வருகிறது. அதனப்படையில், இன்று, பாலவநத்தம் ஊராட்சியில் கட்டப்பட்டு வரும் மாதிரி தனிநபர் இல்ல கழிப்பறையை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த மாதிரி இல்ல கழிப்பறை மாற்றுத்திறனாளிகள் தனது மூன்று சக்கர வண்டியில் (ஊலுஊடுநு) சென்று பயன்படுத்துவதற்கு ஏதுவாக சாய்தளம் அமைக்கப்பட்டு, அதன் மூலம் கழிப்பறையின் உள்ளே சென்று அவர்கள் எளிமையான முறையில் இந்த கழிப்பறையை பயன்படுத்துவதற்கும் வெஸ்டர்ன் டாய்லட் (western toilet) அமைக்கப்பட்டுள்ளன. மேலும், விருதுநகர் மாவட்டத்தில் முதல்கட்டமாக 5 மாற்றுதிறனாளி நபர்களுக்கு மாதிரி இல்ல கழிப்பறை கட்டப்பட்டு வருகிறது.

அதன் தொடர்ச்சியாக மிகவும் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளை கண்டறிந்து, தனிநபர் இல்ல கழிப்பறை கட்டுவதற்கு திட்டமிடப்பட்டு, இத்திட்டம் செயல்படுத்தப்படுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் ஜெ.மேகநாதரெட்டி தெரிவித்தார்.

இந்த ஆய்வின் போது, திட்ட இயக்குநர் (மா.ஊ.வ.ம திலகவதி, செயற்பொறியாளர்.சக்திமுருகன், உதவி பொறியாளர் பாண்டியராஜன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சூர்யகுமாரி, .ரவிக்குமார் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button