மாவட்டச் செய்திகள்

இராஜபாளையம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் பணம் கையாடல்!மேலாளர் (பொறுப்பு) மற்றும் காசாளர் தற்காலிக பணி நீக்கம் செய்து விருதுநகர் துணைப்பதிவாளர் (பால்வளம்

இராஜபாளையம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் பல லட்சம் ரூபாய் முறைகேடு செய்துள்ளதாக சோதனையில் தெரிய வந்தது.

இதையடுத்து மேலாளர் (பொறுப்பு) ரா.தங்கமாரியப்பன் மற்றும் காசாளர் ந.வேல்முருகன் ஆகியோரை தற்காலிக பணி நீக்கம் செய்து விருதுநகர் துணைப்பதிவாளர் (பால்வளம்)(மு.கூ.பொ.), .நவராஜ் அவர்களால் உத்தரவிடப்பட்டுள்ளது!



விருதுநகர் மாவட்டம், துணைப்பதிவாளர்(பால்வளம்), விருதுநகர் சரக கட்டுப்பாட்டில் உள்ள ஆர்.56 இராஜபாளையம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் 10.05.2022 அன்று, கணக்குகள் திடீர் ஆய்வு செய்யப்பட்டதை தொடர்ந்து, அதிக கையிருப்பு தொகை வைத்திருந்தது மற்றும் ரொக்க சிட்டாவின்படி 10.05.2022 அன்று ரூ.6,24,415.20 (ரூபாய் ஆறு இலட்சத்து இருபத்து நான்காயிரத்து நானூற்று பதினைந்து பைசா இருபது மட்டும்) கையிருப்பு தொகை குறைவாக இருந்தது கண்டறியப்பட்டுள்ளது.


கையிருப்பு குறைவுக்கு காரணமான காசாளர் திரு.ந.வேல்முருகன் மற்றும் கையிருப்பு குறைவை கண்டறிந்து தடுக்க தவறிய சங்க மேலாளர் (பொறுப்பு) திரு.ரா.தங்கமாரியப்பன் ஆகியோர் மீதான தற்காலிக கையாடல் உறுதி செய்யப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, ஆர்.56 இராஜபாளையம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க மேலாளர் (பொறுப்பு) ரா.தங்கமாரியப்பன் மற்றும் காசாளர் ந.வேல்முருகன் ஆகியோரை 12.05.2022 முதல் தற்காலிக பணி நீக்கம் செய்து விருதுநகர் துணைப்பதிவாளர் (பால்வளம்)(மு.கூ.பொ.), நவராஜ் அவர்களால் உத்தரவிடப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button