சென்னையில் இருந்து நாகர்கோவிலுக்கு சென்ற ரயிலில் கட்டு கட்டாக 500 ரூபாய் நோட்டுகள்!
பணத்தை பறிமுதல் செய்த திண்டுக்கல் இருப்புப் பாதை காவல்துறையினர்

திண்டுக்கல்
நாகர்கோயிலைச் சேர்ந்தவர் நவநீதகிருஷ்ணன். இவர் கார் வாங்கி விற்கும் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் நவநீதகிருஷ்ணன் சென்னையில் இருந்து நாகர்கோவிலுக்கு திருக்குறள் எக்ஸ்பிரஸ் ரயிலில் ரூபாய். 13 லட்சத்து 77 ஆயிரத்து 900 பணத்தை எடுத்து சென்ற போது

திண்டுக்கல் ரயில்வே காவல்துறையினர், திருச்சி வரை ஓடும் ரயிலில் கஞ்சா சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.

திருக்குறள் எக்ஸ்பிரஸ் ரயிலிலும் சோதனை மேற்கொண்டனர். அப்போது நவநீதகிருஷ்ணன் வைத்திருந்த பையை சோதனையிட்ட போது அதில் 500 ரூபாய் நோட்டுகள் கட்டு கட்டாக இருந்ததை பார்த்த திண்டுக்கல் இருப்பு பாதை காவல்துறையினர்

திண்டுக்கல் ரயில்வே நிலையத்தில் ரயில் நின்றவுடன் நவநீதகிருஷ்ணனை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று அவர் வைத்திருந்த பேக்கை திறந்து

கட்டுக்கட்டாக இருந்த 500 ரூபாய் நோட்டுகளை எண்ணிப் பார்த்த போது 13 லட்சத்து 77 ஆயிரத்து 900 ரூபாய் இருந்தது.

இந்த பணம் கணக்கில் வராத பணம் என தெரிய வந்துள்ளது.
மேலும் அவரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தியதில் முன்னுக்கு பின் முரணாக கூறியுள்ளார். பணத்திற்கு உரிய ஆதாரம் இல்லாமல் இருந்ததும் காவல்துறையிடம் சந்தேகத்தை ஏற்படுத்தியது. சென்னையில் ஒரு நபரிடம் நாகர்கோவிலில் இருந்து கொண்டு சென்ற வெளிநாட்டு கரன்சி பணத்தை மாற்றிவிட்டு, நாகர்கோவிலுக்கு வந்து கொண்டிருந்தது தெரிய வந்தது. மேலும் வருமானவரித்துறை மதுரை அதிகாரிகளிடம் தகவல் கூறிய நிலையில், வருமானவரித்துறை அதிகாரிகளும் திண்டுக்கல் ரயில்வே காவல் நிலையத்திற்கு வந்து நவநீதகிருஷ்ணனிடம் விசாரணை நடத்தினர். பின்னர் அவரை வருமானவரித்துறையினர் மதுரைக்கு அழைத்துச் சென்று தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.