மத்திய அரசு

தலைமறைவாக உள்ள மணல் மாபியாக்கள் ராமச்சந்திரன், ரத்தினம் இருவரையும் கைது செய்ய அமலாக்கத்துறை முடிவு!

மணல் கொள்ளை விவகாரம் தொடர்பாக, நீர்வளத்துறை முதன்மை தலைமை பொறியாளர் முத்தையா முக்கிய ஆவணங்களை அளித்துள்ள நிலையில், ஒப்பந்ததாரர்கள் ராமச்சந்திரன், ரத்தினம் ஆகியோரை கைது செய்ய, அமலாக்கத்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

அரசு நடத்தும் குவாரி களில், அளவுக்கு அதிகமாக மணல் அள்ளி கொள்ளை நடந்துள்ளது. இதன் வாயிலாக, மணல் குவாரிகளின் ஒப்பந்ததாரர்கள் புதுக்கோட்டை ராமச்சந்திரன், கரிகாலன், திண்டுக்கல் ரத்தினம் ஆகியோர் சட்ட விரோத பண பரிமாற்றத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதற்கு, ஆளுங்கட்சி முக்கிய புள்ளிகள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் உடந்தையாக இருந்து உள்ளனர். இதுகுறித்து, அமலாக்கத்துறை அதிகாரிகள், மணல் குவாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர்களின் வீடு, அலுவலகங்களில் சோதனை நடத்தியதில் முக்கிய ஆவணங்களை கைப்பற்றியதாக தகவல் வந்தது.அதன் அடிப்படையில், நீர்வளத்துறை முதன்மை தலைமை பொறியாளர் முத்தையாவிடம் இரண்டு நாட்கள் விசாரித்து வாக்குமூலம் பெற்றனர். அவர், சில முக்கிய ஆவணங்களை அளித்துள்ளார்.இதையடுத்து, புதுக்கோட்டை ராமச்சந்திரன், திண்டுக்கல் ரத்தினம் வீடு, அலுவலகங்களில் மீண்டும் சோதனை நடத்தி, சில ஆவணங்களை கைப்பற்றி உள்ளனர்.இதற்கிடையே, ராமச்சந்திரன், ரத்தினம் ஆகியோருடன் மிக நெருக்கமாக இருந்த, 10 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளுக்கு ‘சம்மன்’ அனுப்பி உள்ளனர்.சோதனைக்கு பின், ராமச்சந்திரன், ரத்தினம் ஆகியோர் தலைமறைவாகி உள்ளனர். இருவரையும் கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது.இதுகுறித்து, அமலாக்கத்துறை அதிகாரிகள் கூறியதாவது: அண்ணா பல்கலை பேராசிரியர்கள் மற்றும் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் உதவியுடன், ‘டிஜிட்டல்’ கருவிகள் வாயிலாக அளவீடு செய்யப்பட்டு, முறைகேடு நடந்து இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.சோதனையில் சிக்கிய ஆவணங்களும், அதற்கு வலு சேர்க்கின்றன. அதன் அடிப்படையில், ராமச்சந்திரன், ரத்தினம் ஆகியோரை கைது செய்து விசாரிக்க உள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

வில்லங்க பேர்வழி என பெயர் எடுத்த மணல் ராமச்சந்திரன் விஐபி வீட்டு திருமணங்களில் முகம் காட்டுவது வழக்கமாக கொண்டுள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் வள்ளதிரகொட்டை அடுத்த முத்துப்பட்டினத்தை சொந்த ஊராகக் கொண்ட இவர் , ஆரம்ப காலத்தில் ரைஸ்மில் அதிபராக இருந்து பிறகு உறவினர் ரத்தினத்துடன் இணைந்து ஒயின்ஷாப் கைகளை எடுத்து நடத்தி பின்னர் மணல் வியாபாரத்தில் கால்பதித்தவர் ஆவார். சட்டவிரோத பணப் பரிமாற்றம் மற்றும் தங்கம் பதுக்கிவைத்ததாக கைது செய்யப்பட்ட காண்ட்ராக்டரும் தொழிலதிபருமான சேகர் ரெட்டி, மற்றும் அவரது உறவினர் சீனிவாசரெட்டி, கூட்டாளி பிரேம் ஆகியோரின் வீடுகளில் வருமான வரித்துறை சோதனை நடத்தி அதில் 131 கோடி ரூபாய் பணம், 171 கிலோ தங்கம் மற்றும் சொத்துகள் அமலாக்கத்துறை பறிமுதல் செய்தது. பின்னர் சேகர் ரெட்டி கைது செய்யப்பட்டு அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையை அடுத்து அவரது ஆதரவாளர்களான தொழிலதிபர்கள் திண்டுக்கல் ரத்தினம் , மற்றும் அவரது உறவினர் புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் ராமச்சந்திரன் என்கின்ற மணல் ராமச்சந்திரன் ஆகியோரையும் சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர். மணல் பிசினஸில் கோலோச்சிய படிக்காசு, மற்றும் ஆறுமுகசாமி, ஆகியோருடன் தொடர்பு வைத்துக் கொண்ட இவர், மணல் குவாரிகளில் சப்-டீலராக இணைந்து குவாரிகளை நடத்தி வந்ததும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button