காவல் செய்திகள்

வாடிப்பட்டி அருகே நிதி நிறுவன நிர்வாகியை காரில் கடத்தி 3 லட்சம் ரூபாய் பணத்தைப் பறித்து காரில் தப்பிச் சென்ற கடத்தல் கும்பல் !பொதுமக்களிடம் சிக்கியது எப்படி!? நடந்தது என்ன!?

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சிறுவதி கிராமத்தைச் சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 42). இவர் மதுரையில் உள்ள நியூ மேக்ஸ் நிதி நிறுவனத்தில் முக்கிய நிர்வாகியாக இருந்து வருகிறார்.இவர் 26/12/2024 முன் தினம் மதுரையில் இருந்து நாமக்கல் காரில் சென்று கொண்டிருந்தபோது வாடிப்பட்டி அருகே உள்ள பிரபல ஹோட்டலில் உள்ள கார் பார்க்கிங்கில் நின்று கொண்டு லிசி என்பவரிடம் கார்த்திகேயன் செல்போனில் பேசிக் கொண்டிருந்துள்ளார்.

அப்போது அவர் அருகே வந்த காரில் இருந்து இறங்கிய நான்கு பேர் திடீரென கார்த்திகேயனை அவர்களது காரின் உள்ளே ஏறும்படி பிடித்து இழுத்த போது கார்த்திகேயன் அலறல் சத்தத்துடன் செல்போன் இணைப்பு துண்டிக்கப்பட்டதாகவும் இது சம்பந்தமாக கார்த்திகேயனின் தம்பி முத்துக்குமார் என்பவர் வாடிப்பட்டி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் . வாடிப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்த நிலையில் 26/12/2024 அன்று திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியில் 5 மர்மநபர்கள் மது போதையில் காவல்துறையின் சோதனை சாவடி மீது மோதிவிட்டு வேகமாக உடனே காவல்துறையினர் அந்த வாகனத்தை பின்தொடர்ந்து வந்துள்ளனர். மது போதையில் காரை ஓட்டி வந்த நபர்கள் வாடிப்பட்டி அருகே சாணார்பட்டி அருகே காட்டு பகுதியில் நுழைந்துள்ளனர். தாறுமாறாக சென்ற காரை கிராம மக்கள் காரை சுற்றிவளைத்த போது காருக்குள் இருந்த 4 பேரும் தப்பி ஓடி விட்டனர். காரை ஓட்டி வந்த டிரைவர் பசுபதி என்பவர் மட்டும் பொதுமக்களிடம் சிக்கிக்கொண்டார்
அவரை கிராம மக்கள் வாடிப்பட்டி தகவல் கொடுத்துள்ளனர். உடனே சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் ஓட்டுனர் பசுபதியை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டபோது கார்த்திகேயனை காரில் கடத்தி மிரட்டி மூன்று லட்சம் ரூபாய் பணம் வாங்கியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. ஓட்டுநர் பசுபதி கூறிய தகவலின் படி காவல்துறையினர் அவர்களைத் தேடி வந்த நிலையில் தப்பிச்சென்ற 4 பேர் மலைப்பகுதியில் தப்பிக்க முடியாமல் மீண்டும் கிராமத்திற்குள் வரவே பொதுமக்கள் அவர்களையும் பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைக்க வாடிப்பட்டி போலீசார் அந்த நான்கு பேரையும் வாடிப்பட்டி காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
போலீசாரின் விசாரணையில் திருச்சியைச் சேர்ந்த நிதி நிறுவன விற்பனை மேலாளராக இருக்கும் தேவா என்பவருக்கு பசுபதி கார் ஓட்டுநராக இருந்து வந்ததாகும் அப்போது அவர் கூறிய ஆசை வார்த்தைகளை நம்பி நிதி நிறுவனத்தில் 2020 ஆம் ஆண்டு 5 லட்சம் ரூபாய் முதலீடு செய்துள்ளார்.அதற்கு மாதம் 4500ரூபாய் அவருக்கு வட்டி கிடைத்துள்ளது. பின்னர் 2022 ஆம் ஆண்டு மூன்று லட்ச ரூபாய் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தால் மூன்று ஆண்டுகளில் ஒன்பது லட்சம் கிடைக்கும் என தேவா கூறியதை நம்பி 3 லட்ச ரூபாய் முதலீடு என மொத்தம் எட்டு லட்ச ரூபாய் ரொக்க பணத்தை நிதி நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளார்.
ஆனால் அந்நிறுவனம் முடங்கியதால் பசுபதிக்கு செலுத்திய பணம் கிடைக்காமல் போனது, இதனால் தேவாவை பலமுறை பசுபதி தொடர்பு கொண்டு பணம் கேட்டபோது, அந்த நிறுவனத்தில் நானும் நிறைய பணம் இழந்து உள்ளேன் எனக் கூறி கை விரித்து விட்டார். அதனை தொடர்ந்து பசுபதி தனது நண்பர்கள் சிலருடன் மதுரையில் உள்ள நிதி நிறுவன அலுவலகத்திற்கு வந்து அந்நிறுவனத்தின் முக்கிய நிர்வாகியான பாலா என்பவரிடம் பணத்தை கேட்கலாம் என முடிவு செய்து திருச்சியிலிருந்து கார் மூலம் மதுரை வந்துள்ளனர்.
அங்கு பாலா என்பவர் கிடைக்காத பட்சத்தில் நிதி நிறுவனத்திற்கு கார்த்திகேயன் வந்துள்ளார். கார்த்திகேயனை கடத்தி வந்தால் அவரிடமிருந்து பணத்தை பெற்று விடலாம் என தேவா பசுபதியிடம் கூறவே நாமக்கல்லுக்கு கார்த்திகேயன் சென்ற காரை பசுபதி கும்பல் பின் தொடர்ந்து வந்து மதுரை வாடிப்பட்டி அருகே வழிமறித்து அவரை கடத்திச் சென்று பணம் கேட்டு மிரட்டி மூன்று லட்ச ரூபாய் பணத்தை வாங்கியதாக கூறப்படுகிறது. அதனை தொடர்ந்து திருச்சியில் இருந்து தேவா பசு பதியை தொடர்பு கொண்டு கார்த்திகேயனை திண்டுக்கல்லில் கீழே இறக்கிவிட்டு ஊருக்கு செல்லுமாறு கூறியுள்ளார் அதன் பின்பு. பணத்துடன் கடத்தல் கும்பல் திண்டுக்கலில் இருந்து நத்தம் வழியாக தேவகோட்டை நோக்கி காரில் சென்ற போது வாகன சோதனையில் ஈடுபட்ட காவல் துறையினர் அதிவேகமாக வந்த காரை நிறுத்துமாறு கூறியுள்ளனர் ஆனால் காவல்துறையினர் கூறியும் காரை நிறுத்தாமல் சோதனைச் சாவடி மீது மோதிவிட்டு அதிவேகமாக காரை ஓட்டி போலீசாரிடம் இருந்து தப்ப முயன்ற கடத்தல் கும்பல் வாடிப்பட்டி அருகே மலைப்பகுதிக்குள் காருடன் தப்பி சென்றுள்ளனர் . இதை பார்த்த அப்பகுதி கிராம பொதுமக்கள் சந்தேகமடைந்த அந்த காரை மடக்கி பிடித்துள்ளனர் அப்போது காரில் உள்ள நான்கு பேர் தப்பி ஓடிவிட்டனர் அதிலிருந்து ஓட்டுநர் மட்டும் பொதுமக்களிடம் சிக்கிக்கொண்ட உடனே காவல்துறைக்கு தகவல் கொடுத்ததன் பெயரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் ஓட்டுனரை பிடித்து விசாரித்த போது கார்த்திகேயனை காரில் கடத்தி மிரட்டி மூன்று லட்சம் ரூபாய் பணத்தை வாங்கி காவல்துறைக்கு பயந்து காத்துக் கொள் த சென்றபோது பொதுமக்களிடம் சிக்கிக் கொண்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. அதன் பின்னர் காட்டுக்குள் தப்பிச் சென்ற நான்கு பேரும் மீண்டும் கிராம பொதுமக்களிடம் சிக்கிக் கொண்டதாக வாடிப்பட்டி காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று அந்த நான்கு பேரையும் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று திருச்சியை சேர்ந்த பசுபதி வயது (29), முத்துக்குமார் வயது (31), கார்த்திக் வயது (30), வீரகணேசன் வயது (30), ஆனந்த் குமார் வயது (25) உள்ளிட்ட ஐந்து பேர் மீதும் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். இதில் ஆனந்தகுமார், வீரகணேஷ் இருவரும் மலைப்பகுதியில் தப்பிக்க முயன்ற போது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டதால் இருவர் மட்டும் மதுரை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மற்ற மூவரையும் கைது செய்து கடத்தலுக்கு பயன்படுத்திய கார் மற்றும் மூன்று லட்ச ரூபாய் ரொக்க பணத்தையும் பறிமுதல் செய்துள்ளனர் mபோலீசார் அவர்களிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல் இந்த கடத்தலுக்கு முக்கிய காரணமாக இருந்த நிதி நிறுவன விற்பனை மேலாளராக பணிபுரிந்து வந்த தேவா என்பவரையும் வாடிப்பட்டி காவல்துறையினர் தேடி தேடி வருவதாகவும் தகவல் தெரிவித்துள்ளனர்.

Related Articles

Back to top button