சினிமா

சோசியல் மீடியா என்ற பெயரில் தவறான செய்திகளை பரப்பி வருபவர்களுக்கு செக்! தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் அதிரடி!

சோசியல் மீடியா என்ற பெயரில் தவறான செய்திகளை பரப்பி வருபவர்களுக்கு செக் வைத்துள்ள தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம்!


தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கர் சார்பில் அறிவிப்பு!
தமிழ் திரையுலகில் நடக்கும் முக்கிய நிகழ்வுகளை பொதுமக்களுக்கும் பொதுவெளியில் கொண்டு செல்லும் முக்கிய பங்காக வகித்து வரும் ஊடகத்துறை இத்தகைய ஊடகத்துறை தற்போது செயல்பட்டு வருவது சினிமா துறையில் இருப்பவர்களுக்கு மிகவும் தர்ம சங்கடத்தை ஏற்படுத்தி உள்ளது.
அதற்கு எடுத்துக்காட்டாக இயக்குனரும் நடிகரும் ஆன மாரிமுத்து மற்றும் விஜய் ஆண்டனி மகள் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் நேரங்களில் ஒரு சில ஊடகங்கள் நடந்து கொண்டது மிகவும் வருத்தம் அளிக்கிறது என்றும் அதுமட்டுமின்றி திரைத்துறை பற்றி ஒரு சில பத்திரிக்கையாளர்கள் தலைமுறை இல்லாமல் செய்திகளை பரப்பி வருவதால் அது சம்பந்தமாக தென்னிந்திய திரைப்பட பத்திரிகை தொடர்பாளர்கள் சங்கத்தை அழைத்து பேசி வரை முறைப்படுத்தி நடைமுறைக்கு கொண்டு வர உள்ளதாகவும் சோசியல் மீடியா சமூக வலைதளங்கள் என்ற பெயரில் தவறான செய்திகளை பரப்பி வருபவர்களை களையெடுப்பது பற்றி பேச்சுவார்த்தை நடத்தி ஒரு முடிவுக்கு கொண்டு வர இருப்பதாக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது!

Related Articles

Back to top button