கல்வி

குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளை கல்வி மேம்பட நடவடிக்கை!

2021-22 ஆம் கல்வி ஆண்டில் பள்ளிச் செல்லா குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகள் குறித்த கணக்கெடுப்பு பணி

இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009ன்படி 6 முதல் 14 வயதுடைய அனைத்து குழந்தைகளையும் முறையான பள்ளியில் சேர்த்து கல்வி வழங்க வேண்டும். அதன்படி ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மூலமாக ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சி / நகராட்சி / பேரூராட்சிகளின் குடியிருப்புகளிலும் 10.08.2021 முதல் 31.08.2021 வரை 6 முதல் 19 வயதுடைய பள்ளிச் செல்லா / இடைநின்ற குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளை பள்ளித் தலைமையாசிரியர், ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், வட்டார வளமைய மேற்பார்வையாளர்(பொ), ஆசிரியர்கள், பயிற்றுநர்கள், சிறப்பாசிரியர்கள், அரசு சாரா தொண்டு நிறுவனங்கள், கல்வி தன்னார்வலர்கள் மற்றும் பிற துறை சார்ந்த அலுவார்களை கொண்டு கணக்கெடுப்பு பணி நடைபெறவுள்ளது. இக்கணக்கெடுப்புப்பணி மூலம் கண்டறியப்படும் குழந்தைகள் உண்டு உறைவிட சிறப்பு பயிற்சி மையங்களிலும் இணைப்பு சிறப்பு பயிற்சி மையங்களிலும் பள்ளிகளின் நேரடி சேர்க்கை மூலம் சேர்த்து சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு மீளவும் முறையான பள்ளிகளில் சேர்க்கப்பட்டு அவர்களின் கல்வி மேம்பட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும், கொரோனா சார்ந்த அரசின் வழிக்காட்டு நெறிமுறைகளையும், சமூக இடைவெளியை பின்பற்றி கணக்கெடுப்பு பணி மேற்கொள்ளவும், இப்பணிக்கு பொதுமக்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் மா.ஆர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

Related Articles

13 Comments

  1. Backbiome is an advanced daily wellness supplement formulated to help support spinal comfort, reduce feelings of built-up tension, and promote freer, smoother movement throughout backbiome everyday life.

  2. Hey there, You’ve done an incredible job. I will certainly digg it and for my part suggest to my friends. I am sure they’ll be benefited from this site.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button