இரவு முழுவதும் பழனி மலையில் தூங்கிய மர்ம ஆசாமி! கோவில் பாதுகாப்பு நிர்வாகிகள் மீது அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்குமா!

பழனி மலைக்கோயிலில் இரவு பத்து மணிக்கு மேலாக பக்தர்கள் யாரும் தங்க அனுமதி இல்லை.

தைப்பூசத் திருவிழா விற்காக எடப்பாடியில் இருந்து வரக்கூடிய மீனவ சமுதாய மக்கள் மட்டும் ஒரு நாள் இரவு மாலை மீது தங்கி வழிபட பாரம்பரிய முறைப்படி கோயில் நிர்வாகம் அனுமதி அளிப்பதை பக்தர்களால் சிறப்பாக கருதப்படுகின்றனர்.
சேலம் மாவட்டம் எடப்பாடியில் இருந்து பருவதராஜகுல சமூகத்தைச் சேர்ந்த மீனவ மக்கள் 50,000 பேர் சாமி தரிசனம் செய்ய பாதயாத்திரையாக பழனிக்கு காவடி எடுத்து வரும் பக்தர்கள் மலை மீது ஒரு நாள் தங்கியிருந்து முருகனை வழிபாடு செய்வது வழக்கம்.இந்த வழக்கம் கடந்த 350 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத் தக்கது .
சில தினங்களுக்கு முன்பு பழனி திருக்கோயில் மலை மீது உள்ள

(first aid centre )முதல் உதவி சிகிச்சை மையம் உள்ளது. அங்கு ஒரு நபர் இரவு முழுவதும் படுத்து தூங்கி இருந்துள்ளார்.. காலையில் கோயில் நடை திறந்த பின்பு முதல் உதவி மையத்திற்கு வந்தவர் படுத்து இருந்த அந்த நபரை எழுப்பி யாருப்பா நீ என்று கேட்க நான் மதுரை என்றும் இரவு 9.30 மணிக்கு அன்னதானம் சாப்பிட்டு விட்டு அப்படியே தூங்கி விட்டேன் என்று அந்த நபர் நம் கையில் இருந்த ஆதார் அட்டையை காட்டி உள்ளார். அந்த நபர் பார்பதற்கு கொஞ்சம் மனம் நலம் பாதித்தவர் போல் போல் இருந்ததைக் கண்டு அந்த நபரை அனுப்பி உள்ளார்.
பழனி மலையின் பாதுகாப்பு கருதி பக்தர்கள் யாரும் இரவு நேரத்தில் தங்கக்கூடாது என்று இருக்கும்போது. எப்படி நேற்று இரவு மலை மீது தங்கினார். எத்தனை மணிக்கு இவர் அந்த இடத்திற்கு வந்தார் இவர் தங்கியதற்கு அருகில் பழநி மலையின் யானைப்பாதை வழியில் பலநூறு ஆண்டுகளாக வற்றாத வள்ளிசுனை இருக்கு.

இது புனித சுனை. அதனருகேதான் வள்ளித் தாயார் மரத்தடியில் நாகர்களுடன் தனி சன்னதியில் அமர்ந்து அருள்பாலிக்கிறார். அங்கு சிவலிங்கம், விநாயகர் சிலைகளும் உள்ளன.
வள்ளி சுனையில் உண்டியல்கள் உள்ளன. இப்படி திருக்கோயிலின் பாதுகாப்பு விஷயத்தில் மிகவும் மெத்தன போக்காக செயல்படுகிறார்கள் .

இரவு மலைக்கோயில் பாதுகாப்பு பணியில் இருந்தவர்கள் மற்றும் கோவில் நிர்வாகிகள் மீது இந்து சமய அறநிலைத்துறை ஆணையர் தகுந்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அதேபோல் அந்த நபர் எத்தனை மணிக்கு கோவில் மாலை மீது வந்தார் என்பதை சிசிடிவி ஆதாரத்தை தேவஸ்தான நிர்வாகம் வெளியிட வேண்டும் என்று விசுவ இந்து பரிசத் வலியுறுத்துகிறது.




