காவல் செய்திகள்

இரண்டு மாவட்ட காவல்துறையை தன் கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு தடை செய்யப்பட்ட ஆன்லைன் லாட்டரியை படு ஜோராக செய்து வரும் தேனி மாபியா!? குண்டர் சட்டத்தில் கைது செய்யாமல் இருக்கும் பின்னணி என்ன!? நடவடிக்கை எடுப்பாரா தென் மண்டல ஐஜி!

காவல்துறையை தன் கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு தடை செய்யப்பட்ட ஆன்லைன் லாட்டரியை படு ஜோராக செய்து வரும் தேனி மாபியா யார்!? அவரது பின்னணி என்ன!? பல குடும்பங்களை சீரழித்து வரும் தடை செய்யப்பட்ட லாட்டரி மாபியாக்கள் மீது நடவடிக்கை எடுக்க தயங்கும்

தேனி மாவட்ட ஆட்சியர் மற்றும்  காவல் கண்காணிப்பாளர்!?நடவடிக்கை எடுப்பாரா தென் மண்டல ஐஜி!

லாட்டரிகள் (ஒழுங்குமுறை) சட்டம் 1998ன் (மத்திய சட்டம் 1998ன் 17வது பிரிவு) 5வது பிரிவின் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் படி, தமிழகத்தில் தமிழக அரசே நடத்தும் லாட்டரிகள் உள்பட அனைத்து வகையான லாட்டரிச் சீட்டுக்களின் விற்பனைக்கும் தடை விதித்து 2003 ஆம் ஆண்டு அப்போது தமிழக மாநில ஆளுநராக இருந்த ராமமோகன் ராவ் உத்தரவு பிறப்பித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தத் தடையால் 2003 இல் மாநில அரசுக்கு ஆண்டுக்கு ரூ.22 கோடி அளவுக்கு இழப்பீடு ஏற்பட்டது. (தற்போது அரசு அனுமதியுடன் லாட்டரி விற்பனையில் இருந்தால் தமிழக அரசிற்கு வருடத்திற்கு ஆயிரம் கோடிக்கு மேல் வருவாய் வரும் என ஒரு ஆய்வு அறிக்கை வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் தமிழகத்தில் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை செய்யும் மாபியா கும்பல்கள் வருடத்திற்கு ஆயிரம் கோடிக்கு மேல் வருமானம் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என அதிர்ச்சி தகவலும் வெளிவந்துள்ளது.

அதிர்ஷ்டத்தை மட்டுமே நம்பிக் கொண்டு லாட்டரிச் சீட்டுக்களை வாங்கிக் குவித்துக் கொண்டிருக்கும் ஏழை எளிய சாமானிய கூலித் தொழிலாளிகள் எவ்வளவோ பேர் இன்னும் தமிழகத்தில் இருக்கின்றனர்.
இந்த முறை எப்படியும் பரிசு விழுந்து விடும் என்ற நம்பிக்கையில் தினமும் தடை செய்யப்பட்ட லாட்டரிச் சீட்டுக்களை வாங்கிக் கொண்டிருப்பவர்களும் உள்ளனர்.
இன்னும் சில கூலித் தொழிலாளர்கள் தாங்கள் வாங்கும் சம்பளத்தின் பெரும்பாலான பணத்தை தடை செய்யப்பட்ட லாட்டரிச் சீட்டுக்கள் வாங்குவதற்கே செலவழித்துக் கொண்டிருக்கின்றனர். இதனால் பல பேர் தற்கொலை செய்து கொண்டதும் பல குடும்பங்கள் நடுவீதிக்கு வந்த கதைகளும் உண்டு.
இப்படி ஏமாந்து கொண்டிருப்பவர்களின் பலவீனத்தை சாதகமாக பயன்படுத்தி சட்ட விரோதமாக
தடைசெய்யப்பட்ட கேரளா  மாநில லாட்டரிச் சீட்டுக்களும் தமிழகத்தில் தினசரிப் புழக்கத்தில் உள்ளன. அது மட்டும் இல்லாமல் பஸ், ரயில் நிலையங்கள் உள்ளிட்ட மக்கள் கூடும் பெரும்பாலான இடங்களில் மொபைல் ஷாப் என்ற பெயரில் தடை செய்யப்பட்ட கேரளா மூன்று நம்பர் லாட்டரிச் சீட்டுக்களை சட்டவிரோதமாக விற்பதும் தமிழகத்தில் அன்றாட காட்சிகளில் ஒன்றாக உள்ளது. அதுமட்டுமில்லாமல் ஆன்லைன் லாட்டரிகளும் இன்டர்நெட் மூலமாகச் சக்கைப் போடு போட்டுக் கொண்டிருக்கின்றன. அவ்வப்போது பெயருக்கு லாட்டரி விற்பனை செய்யும் நபர்களை காவல்துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துகின்றனர். இது ஒரு கண்துடைப்பு நாடகம் என்று சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து குற்றச்சாட்டை எழுப்பி வருகின்றனர். தடை செய்யப்பட்ட ஆன்லைன் லாட்டரி விற்பனை செய்யும் முக்கிய குற்றவாளிகளை இதுவரை காவல்துறையினர் கைது செய்ததாக எந்த செய்தியும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தடை செய்யப்பட்ட லாட்ரிகளை விற்று கோடிக்கணக்கில் பணம் குவிக்கும் லாட்டரி மாபியா கும்பல்கள் தமிழக முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் உல்லாச வாழ்க்கை வாழ்ந்து வருகின்றனர் என்பது தான் நிதர்சனம்.குறிப்பாக தேனி திண்டுக்கல் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட ஆன்லைன் லாட்டரி விற்பனை படு ஜோராக நடப்பதாக அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது. கேரளாவில் லாட்டரி விற்பனை அங்கீகரிக்கப்பட்ட தொழில். கடைகள், ஆன்லைன் மற்றும் தனிநபர்கள் மூலம் லாட்டரி விற்பனை அதிகம் நடக்கிறது. பெரும்பாலும் தினசரி லாட்டரிகளே அதிகம். பிற்பகல் 3 மணிக்கே இதன் முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன. மேலும் பம்பர் என்ற பெயரில் பல கோடி ரூபாய் முதல் பரிசை முன்வைத்தும் ஏராளமான லாட்டரிகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. கேரளா எல்லையில் அமைந்துள்ள தமிழக மாவட்டமான தேனியில் கேரளா லாட்டரி சீட்டுகள் புழக்கம் அதிகம். தேனி மாவட்டம் முழுவதும் லாட்டரி விற்பனை களைகட்டி வருகிறது. இதனால் கூலித் தொழி லாளர்கள் பலரும் தங்களது பணத்தை இழந்து வருகின்றனர்.
பெரும்பாலும் நடுத்தர, கீழ்த்தட்டு மக்கள் அதிகளவில் லாட்டரி வாங்கி வருகின்றனர். கேரளாவில் இருந்து  லாட்டரிகள் தேனி மாவட்டத்துக்குள் அதிகளவில் கொண்டு வந்து விற்பனை செய்து வருவதாகவும்  லாட்டரி விற்பனையை கட்டுப்படுத்த முடியவில்லை. இதனால் லட்சாதிபதி ஆசையில் ஏராளமான தொழிலாளிகள் தங்களது பணத்தை இழந்து வருகின்றனர். லாட்டரி விற்பனையை கட்டுப்படுத்த காவல்துறைக்கு பெரிய சவாலாக உள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

குறிப்பாக தேனி திண்டுக்கல் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட ஆன்லைன் லாட்டரி விற்பனை படு ஜோராக நடப்பதாக அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது. கேரளாவில் லாட்டரி விற்பனை அங்கீகரிக்கப்பட்ட தொழில். கடைகள், ஆன்லைன் மற்றும் தனிநபர்கள் மூலம் லாட்டரி விற்பனை அதிகம் நடக்கிறது. பெரும்பாலும் தினசரி லாட்டரிகளே அதிகம். பிற்பகல் 3 மணிக்கே இதன் முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன. மேலும் பம்பர் என்ற பெயரில் பல கோடி ரூபாய் முதல் பரிசை முன்வைத்தும் ஏராளமான லாட்டரிகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. ஏஜென்ட் கைகளில் வந்துள்ள லாட்டரி சீட்டுகளின் சீரியல் நம்பர்களை மட்டும் தொலைபேசியில் சொல்வார். அந்த சீரியல் நம்பர்களில் நாம் தேர்வு செய்ய வேண்டும். அந்த நம்பருக்கு பரிசு கிடைத்தால் அதை நம்மிடம் ஏஜென்ட் கொடுப்பார். இப்போது ஏஜென்ட்களையும் போலீசார் மடக்கிப் பிடித்து விடுகிறார்கள். அதனால் வாட்சப் குழுக்கள் மூலமாக சீரியல் நம்பரை தேர்வு செய்ய சொல்கிறார்கள். அந்த சீட்டுக்கான பணத்தைஆன்லையன் பணப்பரிவர்த்தனை மூலமாக பெற்றுக் கொள்கிறார்கள். பரிசு விழுந்தால் அதற்கான தொகையையும் ஆன்லைனில் நம்முடைய வங்கி கணக்குக்கு வந்து சேர்ந்து விடுகிறது என்று கூறினார். தேனியில் மறைமுகமாக பல வாட்சப் லாட்டரிகள் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அது எளிமையாகவும் பாதுகாப்பாகவும் இருப்பதால் இளைஞர்கள் பலர் வாட்சப் லாட்டரியின் மோகத்தால் பணத்தை இழந்து கொண்டிருக்கிறார்கள். கேரளா எல்லையில் அமைந்துள்ள தமிழக மாவட்டமான தேனியில் கேரளா லாட்டரி சீட்டுகள் புழக்கம் அதிகம். தேனி மாவட்டம் முழுவதும் லாட்டரி விற்பனை களைகட்டி வருகிறது. இதனால் கூலித் தொழி லாளர்கள் பலரும் தங்களது பணத்தை இழந்து வருகின்றனர்.
பெரும்பாலும் நடுத்தர, கீழ்த்தட்டு மக்கள் அதிகளவில் லாட்டரி வாங்கி வருகின்றனர். கேரளாவில் இருந்து  லாட்டரிகள் தேனி மாவட்டத்துக்குள் அதிகளவில் கொண்டு வந்து விற்பனை செய்து வருவதாகவும்  லாட்டரி விற்பனையை கட்டுப்படுத்த முடியவில்லை. இதனால் லட்சாதிபதி ஆசையில் ஏராளமான தொழிலாளிகள் தங்களது பணத்தை இழந்து வருகின்றனர். லாட்டரி விற்பனையை கட்டுப்படுத்த காவல்துறைக்கு பெரிய சவாலாக உள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

இந்த தடை செய்யப்பட்ட ஆன்லைன் லாட்டரி விற்பனையை தேனியில் ஒரு இளம் வயது நபர் 50க்கும் மேற்பட்ட ஏஜெண்டுகளை வைத்து 200க்கும் மேற்பட்ட பணியாளர்களை வைத்து
சட்ட விரோத ஆன்லைன் லாட்டரி விற்பனை செய்து வருவதாகவும் பல நூறு கோடிக்கு அதிபரான அந்த நபர் தேனி டுடேஸ் ஃபேஷன் உரிமையாளர் சக்தி எனவும் அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது

தேனி மற்றும் திண்டுக்கல் ஆகிய இரண்டு மாவட்ட காவல்துறையை தன் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு மறைமுகமாக லாட்டரி விற்பனை செய்யும் லாட்டரி  மாபியா யார் !?திண்டுக்கல் தேனி மாவட்ட ஐ ஜி  நடவடிக்கை எடுக்காததன் பின்னணியில் இருப்பது யார்!? நடப்பது என்ன!?


தேனி மாவட்டம் வீரபாண்டி மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழாவில் ராட்டினங்கள் அமைப்பதற்காக இந்து சமய அறநிலைத்துறை சார்பாக ஏலம் விடப்படும்.

அதன் பின்பு 2024 ஆம் ஆண்டு வீரபாண்டி சித்திரை திருவிழாவில் 2023 ஆம் ஆண்டு விட 59.40 லட்சம் கூடுதல் தொகை கொடுத்து தேனி அம்மன் அம்யூஸ்மென்ட் உரிமையாளர் சக்தி நேரடியாக அவரது பெயரில்
₹2. 55 கோடிக்கு

ராட்டினங்களை ஏலம் எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இவ்வளவு பெரிய தொகைக்கு
ராட்டினம் ஏலம் எடுத்த தேனி சக்தி யார் !? அவர் என்ன தொழில் செய்கிறார்!?அவர் பின்னணி என்ன !? அவருக்கு பின்புலமாக செயல்படும் அரசியல் கட்சி முக்கிய நிர்வாகிகள் யார்!?என தேனி மாவட்டம் முழுவதும் விசாரணை மேற்கொண்ட போது பல திடுக்கிடும் அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது.

. 2021 ஆம் ஆண்டில் ஏலம் எடுப்பதில் சிண்டிகேட் இருப்பதாக ஏலம் எடுப்பவர்களுக்குள் மோதல் போக்கு ஏற்பட்டது. அதன் பின்பு 2023 ஆம் ஆண்டு
அம்மன் அம்யூஸ் மென்ட் உரிமையாளர் சக்தி என்பவர் ஏலம் எடுக்க வரும் அனைவரையும் கூப்பிட்டு பேசி அவர்களுக்கு தேவையான பணத்தை கொடுத்து பினாமி பெயரில் ஏலம் எடுத்ததாக தேனி மாவட்டத்தில் பரவலாக பேசப்பட்டு வந்தது .2023 ஆம் ஆண்டு கோவில் திருவிழா ஏலத்தில் லாட்டரி சக்தி
ஒரு கோடியே 96 லட்சத்திற்கு

தன்னுடைய பினாமியான கிருஷ்ணன் என்றவர் பெயரில் பொழுதுபோக்கு ராட்டினங்கள் ஏலம் எடுக்க வைத்தது குறிப்பிடத்தக்கது. .  ஏலம் எடுக்க அதிகாரிகள் முதல் ஏலம் எடுக்க வந்த அனைவருக்கும் பல லட்சம் கொடுத்து சமரசம் செய்து இந்த ஏலத்தை லாட்டரி சக்தி எடுத்ததாகவும் வீரபாண்டி ஏலத்தில் கலந்து கொண்ட ஒரு சிலர் பரவலாக அப்போது பேசி வந்தனர்.

சட்டவிரோத கேரளா ஆன்லைன் லாட்டரி விற்பனையை செய்து வரும் தேனி சக்திக்கு பின்புலமாக தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சக்தியின் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் முக்கிய பொறுப்பில் உள்ளதாகவும் தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல்துறை உயர் அதிகாரிகளுக்கும் மாதம் ஒருமுறை தக்க சன்மானத்தை கொடுத்து ஆன்லைன் விற்பனைக்கு எந்தவித தடங்களும் இல்லாமல் பார்த்துக் அதேபோல் ஆன்லைன் லாட்டரி விற்பனை செய்வதை தொலைக்காட்சி மற்றும் பத்திரிகைகளில் வராமலும் பார்த்துக் கொள்கிறாராம். குறிப்பாக தேனி நகரத்தில் பத்துக்கும் மேற்பட்ட இடத்தில் தடை செய்யப்பட்ட ஆன்லைன் லாட்டரி விற்பனை அமோகமாக நடைபெற்று வருவதாகவும் இதை தடுக்க வேண்டிய

தேனி நகர துணை காவல் கண்காணிப்பாளர் பார்த்திபன் கடைக்கு எங்க போறது நம்ம கடைக்கு எல்லாம் போக முடியுமா

தேனி நகர காவல் துணை கண்காணிப்பாளர் பார்த்திபன் கீழ் உள்ள காவல்துறையினர் பெயரளவுக்கு ஒரு சிலரை பிடித்து  வழக்கு பதிவு செய்து கைது செய்து வருவதாகவும் இது ஒரு கண்துடைப்பு நாடகம் எனவும் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனையின் முக்கிய குற்றவாளியான மாபியாவை கைது செய்யாமல் மௌனம் காப்பது ஏன் என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.
அதே போல் திண்டுக்கல் மாவட்டத்தில்  தேனி சக்தியின் உறவினர் ஒருவரை வைத்து திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் தடை செய்யப்பட்ட ஆன்லைன் லாட்டரி விற்பனையை படு ஜோராக செய்து வருவதாகவும்.
50 இக்கும் மேற்பட்ட ஏஜெண்டுகளை வைத்து 200க்கும் மேற்பட்ட பணியாளர்களை வைத்து தேனி திண்டுக்கல் இரண்டு மாவட்டங்களிலும்  தடை செய்யப்பட்ட ஆன்லைன் லாட்டரி விற்பனை செய்து வருவதாகவும் அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் முக்கிய பொறுப்பில் இருப்பவர் சட்டவிரோத ஆன்லைன் லாட்டரி விற்பனை செய்து வருவதை தொலைக்காட்சிகள் மற்றும் பத்திரிக்கையில் வராமல் பார்த்துக்கொண்டு உறுதுணையாக செயல்பட்டு வருவதாகவும் அதற்காக காவல்துறைக்கு மாதம் ஒரு பெரிய தொகையை சன்மானமாக தேனி சக்தி இடம் பெற்று கொடுக்க வேண்டிய காவல்துறை அதிகாரிகளுக்கு கொடுத்து வருவதாகவும் அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது. அதற்காக திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்ட காவல்துறையில் உள்ள முக்கிய அதிகாரிகளுக்கு சன்மானமாக மாதம் சுமார் ஒரு கோடி வரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முக்கிய பொறுப்பில் உள்ளவர்கள் மூலம்  கப்பம் கட்டி வருவதாகவும் அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது. அதுமட்டுமில்லாமல் ஆளுங்கட்சி முக்கிய நிர்வாகிகள் பெயரை பயன்படுத்தி தேனி சக்தி தடை செய்யப்பட்ட ஆன்லைன் லாட்டரி விற்பனையை செய்து வருவதாகவும் இதனால் திமுக ஆட்சிக்கும் கட்சிக்கும் உள்ள நற்பெயரை களங்கப்படுத்தி வருவதாகவும் தேனி திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆளுங்கட்சி அடிமட்ட தொண்டர்கள் தங்களது வேதனையை தெரிவித்துள்ளனர்.தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து துணை காவல் கண்காணிப்பாளர் காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் எந்தவித தங்கு தடை இன்றி ஆன்லைன் லாட்டரி விற்பனை நடந்து வருவதாகவும் தடை செய்யப்பட்ட ஆன்லைன் லாட்டரி விற்பனையை தடுக்க வேண்டிய அந்தந்த காவல் எல்லைக்குட்பட்ட காவல் துறையினர் லாட்டரி விற்பனைக்கு உடந்தையாக செயல்படுவதாகவும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
குறிப்பாக நகர் பகுதியில் மட்டும் பத்துக்கும்  மேற்பட்ட இடங்களில் மொபைல் ஷாப் என்ற பெயர்களில் உள்ள கடைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஆன்லைன் லாட்டரி மற்றும் மூன்று நம்பர் லாட்டரி  விற்று வருவதாக அதிர்ச்சி தகவல் வந்துள்ளது. ஏனென்றால் தேனி மாவட்டத்தில் சுற்றி உள்ள மலை எஸ்டேட்டுகளில் வேலை செய்யும் ஆயிரக்கணக்கான கூலித் தொழிலாளிகள் இது போன்ற தடை செய்யப்பட்ட மூன்று நம்பர் மட்டும் ஆன்லைன் லாட்டரி வாங்குவதில் முக்கிய பங்கு வைப்பதால் அதை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு தேனி மாவட்டம் முழுவதும் ஆன்லைன் லாட்டரி விற்பனை கொடி கட்டி பறப்பதாக அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது.
தொடர்ந்து ஆன்லைன் லாட்டரி விற்பனை செய்து வரும் தேனி சக்தி மீது தேனி நகர காவல் நிலையம் அல்லிநகர காவல் நிலையம் பெரியகுளம் தென்கரை காவல் நிலையம் உசிலம்பட்டி நகர் காவல் நிலையம் பல காவல் நிலையங்களில் பல குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது . அதேபோல் தேனி சக்திக்கு ஏஜெண்டாக செயல்படும் பாலு, திருக்குமரன், ராமச்சந்திரன் ,சார்புதின், அனந்தகுமார் அபுதாகீர் முருக பூபதி ஆகியோர் மீது தேனி நகர் காவல் நிலையம் அல்லிநகரம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆனால் தேனி சக்தி மீது ஏன் குண்டர் சட்டம் வழக்கு போட்டு கைது செய்யக்கூடாது என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து துணை காவல் கண்காணிப்பாளர் காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் எந்தவித தங்கு தடை இன்றி ஆன்லைன் லாட்டரி விற்பனை நடந்து வருவதாகவும் தடை செய்யப்பட்ட ஆன்லைன் லாட்டரி விற்பனையை தடுக்க வேண்டிய அந்தந்த காவல் எல்லைக்குட்பட்ட காவல் துறையினர் லாட்டரி விற்பனைக்கு உடந்தையாக செயல்படுவதாகவும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

ஆன்லைன் லாட்டரி விற்பனை மாபியா
தேனி சக்தி

முத்தையா என்பவரது மகன் சக்தி . இவரது பூர்வீகம் உசிலம்பட்டி ஆகும். உசிலம்பட்டியில் குடும்பத்துடன் வாழ்ந்து வந்ததாகவும் 20 வருடங்களுக்கு முன்பு பிழைப்புக்காக தேனியில் பழைய பேருந்து நிலையத்தில் உள்ள தேனி நகராட்சி கட்டிடத்தில்

ஒரு கடையை வாடகைக்கு எடுத்து அப்போது தமிழக அரசு அனுமதிக்கப்பட்ட லாட்டரி சீட் விற்பனை செய்து வந்துள்ளார்.

மொத்த லாட்டரி விற்பனையாளர்களிடம் 500 ரூபாய் 1000 ரூபாய்க்கு வாங்கி வந்து சில்லறை வியாபாரம் மட்டுமே செய்து வந்த சக்தி தற்போது தேனி திண்டுக்கல் ஆகிய இரண்டு மாவட்டத்திலும் தடை செய்யப்பட்ட மூன்று நம்பர் லாட்டரி மற்றும் ஆன்லைன் லாட்டரியை தன்னுடைய ஏஜெண்டுகளை வைத்து விற்பனை செய்து வருவதாகவும் அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது.
இந்த ஆன்லைன் லாட்டரி விற்பனையை 50க்கும் மேற்பட்ட ஏஜெண்டுகள் வைத்து நூற்றுக்கும் மேற்பட்ட ஊழியர்களை வைத்து சட்டவிரோதமாக ஆன்லைன் லாட்டரி விற்பனை செய்து வருவதாக அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது. இந்த ஆன்லைன் லாட்டரி விற்பனையில் பல நூறு கோடி ரூபாய் சம்பாதித்த கோடிக்கணக்கான பணத்தில்

தேனியில் டுடேஸ் பேஷன் என்ற பெயரில் பிரம்மாண்ட ஜவுளிக்கடை ஒன்றை வைத்துள்ளார். அது மட்டும் இல்லாமல் பல இடங்களில் 

மொபைல் ஷாப் என பல கடைகளை பினாமிகளின் பெயர்களில் வைத்து தடை செய்யப்பட்ட ஆன்லைன் லாட்டரி விற்பனை செய்து வருவதாகவும்அதில் கிடைக்கும் பல கோடி ரூபாய் கருப்பு பணத்தை வைத்து கோடிக்கணக்கில் அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் பினாமி பெயரில் வாங்கி வைத்திருப்பதாகவும் அதுமட்டுமில்லாமல் தடை செய்யப்பட்ட ஆன்லைன் லாட்டரி விற்பனையில் வரும் கருப்பு பணத்தில் தேனி வீரபாண்டி கோவில் சித்திரைத் திருவிழாவில் பொழுதுபோக்கு அம்சமான ராட்டினங்களை ஏலம் எடுத்து வருவதாகவும் தற்போது அதிர்ச்சி தகவல் வந்துள்ளது. தேனி பழைய பேருந்து நிலைய போநகராட்சி கட்டிடத்தில் ஒரு  கடையைப் பிடித்து வியாபாரம் செய்து வந்த சாதாரண ஒரு நபர் தற்போது பல நூறு கோடி ரூபாய்க்கு அதிபராக தேனி சக்தி தொழிலதிபராக உயர்ந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது. ஆனால் தடை செய்யப்பட்ட ஆன்லைன் லாட்டரி விற்பனை செய்யும் மாபியா கும்பல்களை கைது செய்யாமல் பெயருக்கு தேனி காவல்துறையினர்

வேலை செய்யும் அப்பாவி ஊழியர்களை அவ்வப்போது காவல்துறையினர் கைது செய்து வழக்கு பதிவு செய்து வழக்கமாக உள்ளது. தேனி நகர துணை காவல் கண்காணிப்பாளர் இதையெல்லாம் தெரிந்து கொண்டு  கண்டும் காணாமல் இருப்பதன் மர்மம் என்ன! அதேபோல் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும்தேனி மாவட்ட ஆட்சி நிர்வாகம் மற்றும் திண்டுக்கல் மாவட்ட ஆட்சி நிர்வாகமும் தேனி மாவட்ட காவல்துறையும் திண்டுக்கல் மாவட்ட காவல்துறையும் மௌனம் காப்பது ஏன் என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். ஆகவே 20 வருடங்களுக்கு முன்பு ஏழை எளிய சாமானிய மக்கள் பாதிக்கப்படுவதால் லாட்டரி விற்பனையை முற்றிலும் தடை செய்யப்பட்டது. அதேபோல் தற்போது ஏழை எளிய சாமானிய மக்களுக்கு சமூக நீதிப் பாதுகாவலராக இருக்கும் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தடை செய்யப்பட்ட ஆன்லைன் லாட்டரி விற்பனை செய்யும் மாபியா கும்பல்களை கைது செய்ய நேர்மையான காவல்துறை உயர் அதிகாரிகள் தலைமையில் தனிப்படை குழு அமைக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாகும்.

தேனி மாவட்டம் திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் ஆன்லைன் லாட்டரி மூன்று நம்பர் லாட்டரி விற்பனை செய்யும் இடம் விற்பனையாளர்கள் ஆகியவற்றை ஆதாரங்களுடன் வரும் ரிப்போர்ட்டர் விஷன் புலனாய்வு இதழில் விரைவில் வெளிவர இருக்கிறது.

Related Articles

49 Comments

  1. **herpafend**

    herpafend is a natural wellness formula developed for individuals experiencing symptoms related to the herpes simplex virus.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button