ஆக்கிரமித்து வைத்துள்ள நீர் வரத்து பாதைகளை தனியார் நிறுவனத்திற்கு தாரை வார்த்து கொடுத்ததாக வருவாய்த் துறை அமைச்சர் மற்றும் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் பதவி விலக வேண்டி தலைமைச் செயலகம் முற்றுகையிடும் போராட்டத்தை நடத்த இருப்பதாக தமிழ் விவசாயிகள் சங்கம் அறிவிப்பு!

நீர் வரத்து பாதைகளை லவ்லி கார்ட்ஸ் கார்ப்பரேட் தனியார் நிறுவனத்திற்கு தாரை வார்த்து கொடுத்ததாக வருவாய்த் துறை அமைச்சர் பதவி விலக வேண்டும் என தலைமைச் செயலகம் முற்றுகையிடும் போராட்டம் நடத்த இருப்பதாக அறிவிப்பு!
வருவாய்த்துறை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் அமைச்சர் பதவியில் இருந்து விலக வேண்டி தலைமைச் செயலகத்தை
முற்றுகையிடும் போராட்டம் ஏப்ரல் 28ஆம் தேதி நடத்த இருப்பதாக தமிழ் விவசாயிகள் சங்கம் அறிவிப்பு!
விருதுநகர் மாவட்டம் சிவகாசி லவ்லி கார்ட்ஸ் என்கிற கார்ப்பரேட் தனியார் நிறுவனம் வீரச் செல்லையாபுரம் குமாரலிங்க புரம் ஆகிய இரண்டு கண்மாய்களுக்கு வரக்கூடிய நீர் வரத்து கால்வாய்களையும் வண்டிப் பாதையையும் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக

விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் பாதிக்கப்பட்ட விவசாயிகள் நீதி கேட்டு மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் முறையிட்டனர். மாவட்ட ஆட்சியர் சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர் அவர்களை நியமித்து புல தணிக்கை செய்ய உத்தரவிட்டார். சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர் ஆய்வு செய்து ஆக்கிரமிப்பு உள்ளது என்று உறுதி செய்ததாக கூறப்படுகிறது. மாவட்ட ஆட்சியர் அவர்களும் இந்த ஆக்கிரமிப்பை அகற்றலாம் என்று கூறி இருந்தாராம்.அதன் பிறகு எந்த விதமான நடவடிக்கையும் மாவட்ட ஆட்சியர் எடுக்காததால்
லவ்லி கார்ப்பரேட் கம்பெனி ஆக்கிரமிப்பை அகற்ற
தமிழ்நாடு வருவாய்த் துறை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் அவர்களிடம் ஒரு வருடத்திற்கு முன்பு தமிழ் விவசாயிகள் சங்கம் மனுக் கொடுக்கப்பட்டது. .
மீண்டும் ஒரு முறை மனு கொடுக்கப்பட்டது. அதற்கும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
ஆக்கிரமிப்பை அகற்ற முடியாத மாவட்ட ஆட்சியர் அவர்களும் வருவாய்த் துறை அமைச்சர் அவர்களும் பதவி விலகக் கோரி விவசாயிகள்


அமைச்சர் வீட்டு முன்பு 12-4-2025 அன்று காலை 10 மணிக்கு விவசாயிகள் விருதுநகர் மேம்பாலம் அருகில் இருந்து அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் வீட்டை நோக்கி ஊர்வலமாகப் புறப்பட்டனர். காவல்துறை புறப்பட்ட இடத்திலேயே ஊர்வலத்தை தடுத்து நிறுத்தி அனைவரையும் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட விவசாயிகளை விருதுநகர் உழவர் சந்தை அருகில் லெட்சுமி திருமண மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டு மீண்டும் அவர்களை அன்று மாலை 6 மணிக்கு காவல்துறையினர் விடுவித்தனர்.

இந்த போராட்டத்தில் காவிரி வைகை கிருதுமால் குண்டாறு பாசன விவசாயிகள் கூட்டமைப்பு மாநில பொதுச் செயலாளர் எம். அர்ச்சுணன், தென்னிந்திய நதிகள் பாதுகாப்பு சங்கம் தலைவர் பி பி ராமமூர்த்தி, முன்னாள் ராணுவத்தினர் சங்கத் தலைவர் கேசவராஜன், இளம் விவசாயிகள் சங்கத் தலைவர் சௌந்தர்ராஜன், தமிழ் விவசாயிகள் சங்கம் பொருளாளர் கவலூர் சுப்பாராஜ் மற்றும் பெண்கள் உட்பட ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.
ஆனால்
லவ்லி கார்ட்ஸ் கார்ப்பரேட் தனியார் நிறுவனம், மாவட்ட ஆட்சியரை அணுகி ஆக்கிரமிப்பு இல்லை என்று மாவட்ட ஆட்சி நிர்வாகத்திடம் இருந்து ஒரு கடிதத்தை வாங்கி வைத்துக் கொண்டு ஆக்கிரமிப்பு இல்லை என திசை திருப்ப முயற்சி செய்கிறார்கள். ஆகவே
உண்மையிலேயே நீர் வரத்து கால்வாய்கள் விவசாய நிலங்களுக்கு செல்லும் வண்டிப் பாதைகள் அனைத்தையும் ஆக்கிரமிப்பு செய்து வைத்துள்ள தனியார் கார்ப்பரேட் நிறுவனத்திற்கு உடந்தையாக விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் மற்றும் வருவாய்த்துறை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் ஆகியோர் செயல்பட்டு வருவதாகவும்
இந்த பிரச்சினைக்கு தீர்வு காணவில்லை என்றால்

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் மற்றும் வருவாய்த்துறை அமைச்சர் ஆகிய இருவரும் பதவி விலக வேண்டும் என உழவர்களின் உரிமையை மீட்க பாதிக்கப்பட்ட விவசாயிகளுடன் ஏப்ரல் 28ஆம் தேதி தலைமைச் செயலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்த முடிவு செய்துள்ளதாக தமிழ் விவசாயிகள் சங்கம் மாநில குழு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.